ஒலி வேறுபாடறிந்து பொருளைத் தேர்வு செய்தல் என்பது கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் பொருளை புரிந்து அதற்கான சரியான விடையை தேர்ந்தெடுத்தல் ஆகும்.
ரகர-றகர, லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகள் பின்வருமாறு :
னகர, ணகர சொற்களின் பொருள் வேறுபாடு:
| கன்னன் - கர்ணன் | கண்ணன்- திருமால் |
| மன்னன் - அரசன் | மண்ணன்- மனிதன் |
| பனி - குளிர் | பணி - வேலை |
| ஊன் - இறைச்சி | ஊண் - உணவு |
| மன் - நிலையான | மண் - தரை |
| என் - என்னுடையது | எண் - எண்ணிக்கை |
| தனி - தனிமை | தணி - குளிர்மை |
| கனி - பழம் | கணி - கணித்தல் |
| அரன் - ஈஸ்வரன் | அரண் - பாதுகாப்பு, அரண்மனை |
| மனம் - நெஞ்சம் | மணம் - வாசனை |
| கான் - கானகம், காடு | காண் - பார் |
| கனம் - பாரம் | கணம் - கூட்டம், நொடி |
| வன்மை - திடமான,உறுதியான | வண்மை - ஈகை குணம் |
| நுனி - முனை | நுணி - நுட்பம் |
| சுனை - நிரூற்று | சுணை - முட்கள் |
| கன்னி - குமரிப்பெண் | கண்ணி - மாலை |
| அனை - அத்தனை | அணை-நீர்த்தேக்கம் |
| மனை - வீடு, வீட்டிடம் | மணை - அமரும் பலகை |
| ஆனி - மாதம் | ஆணி - சுவற்றில் அடிப்பது |
| கனை - அம்பு | கணை - பேழை |
| ஆனை - யானை | ஆணை - கட்டளை |
| குனி - குனிதல் | குணி - ஆலோசித்தல் |
| சீரிய - சிறப்பான | சீறிய - வெகுண்ட |
| தரி - அணிந்துகொள் | தறி - வெட்டு |
| இரு - இருத்தல் | இறு - முறிதல் |
| பரி - குதிரை | பறி - பிடுங்கிக்கொள் |
| குரம் - நகரம் | குறம் - பக்கம் |
| அரம் - கருவி | அறம் - ஈகை |
| அரை - பாதி, இடுப்பு | அறை - வீட்டு அறை |
| இறை - தீனி | இறை - கடவுள், நீர் இறைத்தல் |
| உரு - வடிவம் | உறு - மிகுதி |
| அரவு - பாம்பு | அறவு - விலக்கம் |
| உரல் - மாவு இடிக்கப்பயன்படுவது | உறல் - பெருத்த துன்பம் |
| அரி - வெட்டு | அறி - தெரிந்துகொள் |
| பொரி - உண்ணும் பொரி | பொறி - இயந்திரம் |
| உரி - உரித்தல் | உறி - உறி அடித்தல் |
| குரை - நாய் குரைத்தல் | குறை - குறைத்தல் |
| திரை - அலை | திறை - கப்பம் |
| கரை - ஓரம் | கறை - அழுக்கு |
| துறவு - துறத்தல் | துரவு - கேணி |
| பறவை - பறக்கும் பறவை | பரவை - கடல் |
| இரை - உணவு | இறை - கடவுள் |
| விறல் - வெற்றி | விரல் - விரல் |
| மறை - வேதம் | மரை - மான் |
| இரும்பு - உலோகம் | இறும்பு - புதர் |
| ஏரி - நீர் தேக்கம் | ஏறி - ஏறுதல் |
| கருப்பு - பஞ்சம் | கறுப்பு-நிறம் |
| குரம் - நரகம் | குறம்-பக்கம் |
| பெரு - பருமன் | பெறு -பெறுதல் |
| குரவர் - சமயக்குரவர் | குறவர்-மலைசாதியினர் |
| ஒரு - ஒன்று | ஒறு - தண்டித்தல் |
| அரு - அருகாமை | அறு - அறுத்தல், புல்வகை |
| பொறுத்து - தாமதித்து | பொருத்து- சேர்த்து |
| அரிவை - பெண் வகை | அறிவை - அறிந்துகொள் |
| பொரு - போரிடு | பொறு - பொறுத்துக்கொள் |
| தெரி - சிதறுதல் | தெறி - நொறுங்குதல் |
| கூரை - வீட்டின் முகடு | கூறை - புடவை |
| உரை - பேச்சு | உறை - உறைவிடம், மூடி |
| நெரி - நசுக்குதல், உடைத்தல் | நெறி - நீதிநெறி, |
| புரம் - காப்பு, நகர் | புறம் - வெளி, பக்கம் |
| மருகி - மருமகள் | மறுகி - தாங்கி |
| செரு - போர் | செறு - திணி, வயல் |
| சீரடி - சிறப்பான அடி | சீறடி - சிறிய அடி |
| நரை - தலை நரை | நறை - தேன் |
| பாரை - கடப்பாரை | பாறை - கற்பாறை |
| அளகு - காட்டுக்கோழி | அலகு - அளவைக்கூறு |
| அள் - கூர்மை, காது | அல் - இரவு |
| அளை - குகை, கல் | அலை - திரி, கடல் அலை |
| இளை - மெலிதல் | இலை - மரத்தின் இலை |
| உளை - மயிர் | உலை - நீர் உலை |
| களம் - போர்க்களம் | கலம் -கப்பல் |
| கள் - தேன், பானம் | கல் - பாறை, கல்வி |
| காளை - எருது | காலை - பொழுது |
| குளவி - பூச்சி | குலவி - குலவுதல் |
| குளம் - நீர்நிலை | குலம் - இனம் |
| கொல் - கொலை | கொள் - பெறுதல் |
| கூளி - பூதம் | கூலி-சம்பளம் |
| தோள் - உறுப்பு | தோல் - சருமம் |
| பள்ளி - பாடசாலை | பல்லி-விலங்கு |
| வாளி - நீர் இறைக்கப்பயன்படுவது | வாலி - சுக்ரீவனின் தமயன் |
| வாள் - கருவி | வால் - விலங்கின் வால் |
| வேள் - இறைவன் | வேல் - கருவி |
| வளி - காற்று | வலி - வேதனை |
| விளை - விளைச்சல் | விலை - மதிப்பு |
| எள் - பயிர்வகை | எல் - சூரியன், வெளிச்சம் |
| தாள் - பாதம் | தால் - நாக்கு |
| கொள்ளி - நெருப்பு | கொல்லி - ஒருமலை |
| நீளம் - நெடுமையாக | நீலம்-நிறம் |
| விள் - விடுதல் | வில் - கருவி |
| கோள் - கிரகம் | கோல் - கொம்பு |
| நால் - நான்கு | நாள் - தினம் |
| மால் - திருமால் | மாள் - இறத்தல் |
