வேர்ச்சொல் என்றால் என்ன?
ஒரு சொல்லின் மூலச்சொல்லே அச்சொல்லின் வேர்ச்சொல் எனப்படும்.
* வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.
* கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும்படி அமைந்திருக்கிறதோ அதுவே வேர்ச்சொல் ஆகும்.
(எ.கா):
நினைத்தேன்
விடை : நினை
சில சொற்களும் அதனோடு வேர்ச்சொற்களும் பின்வருமாறு:
| சொற்கள் | வேர்ச்சொற்கள் |
| பற்றினால் | பற்று |
| ஒடாதே | ஒடு |
| அகன்று | அகல் |
| பார்த்தான் | பார் |
| அறுவடை | அறு |
| கெடுத்தாள் | கெடு |
| இயக்கிடு | இயக்கு |
| பாடிய | பாடு |
| கேட்க | கேள் |
| உற்ற | உறு |
| உருக்கும் | உருக்கு |
| எஞ்சிய | எஞ்சு |
| ஒட்டுவிப்பு | ஒட்டு |
| கண்டனன் | காண் |
| நினைத்தேன் | நினை |
| கொடுதீர் | கொடு |
| ஓடாது | ஓடு |
| கற்றேன் | கல் |
| காத்தவன் | கா |
| காட்சியில் | காண் |
| கொடாமை | கொள் |
| தட்பம் | தண்மை |
| மலைந்து | மலை |
