7வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு:
- ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
- மாநில அரசு விதிக்கத்தக்க வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றின் நிகர வருவாயினை மாநில அரசுக்கும் ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளுதல்,
- அத்தகைய வருவாயில் மேற்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே அவற்றிற்குரிய பங்குகளை முறையே பிரித்தளித்தல்;
- ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய அல்லது அவைகளே தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றைத் தீர்மானித்தல்;
- மற்றும் மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவி மானியங்கள்;
- 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தொடங்கும் ஐந்தாண்டுகளுக்கு பொருந்தும் வகையில், இந்த ஆணையம், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 31 ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு அளித்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் கப்பல் மூழ்கிய விபத்தை பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது:
- கேரளத்தில் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்ற கப்பல்(லைபீரிய கொள்கலன் கப்பல் எம்வி எம்எஸ்சி எல்எஸ்ஏ 3) மூழ்கி விபத்தை பேரிடராக அம்மாநில அரசு அறிவித்தது. கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், பலத்த காற்று வீசியதன் காரணமாக, அரபிக் கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- இதனைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த எரிபொருள் அடங்கிய கன்டெய்னர்களும் கடலில் மூழ்கின. இதனையடுத்து, மாநிலம் தழுவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், கடலில் கப்பல் மூழ்கிய விபத்தை பேரிடராக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்:
- தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் (29.5.2025) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
- சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி 2.6.2023 அன்று நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு விழாவில், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான தலைவர் கலைஞர் பெயரால், சென்னையில் புதிய உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
- அந்த அறிவிப்பிற்கிணங்க, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 91,024 சதுர அடி பரப்பளவில் பொருட்காட்சி அரங்கம், 5,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 50,633 சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மண்டபம், 1,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 5,12,800 சதுர அடி மொத்த பரப்பளவில் கட்டப்படவுள்ள கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- மேலும், கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் முழுவதும் குளிரூட்டும் வசதி மற்றும் மின் ஆக்கி வசதி, மின்தூக்கி வசதி, 1638 சீருந்துகள் மற்றும் 1700 இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ திட்டம் தொடக்கம்
- வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 17,116 கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
- தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக திருவாரூா் மாவட்டம் மாணிக்கமங்கலம் எனும் கிராமத்தில் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் 29.05.2025 தொடங்கி வைத்தாா்.
- TNPSC KEY NOTES : உழவரைத் தேடி வேளாண்மைத் துறை திட்டம்
தமிழ்நாடு அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாகப் பெற வகை செய்யும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
- தலைமைச் செயலகத்தில் 29.05.2025 நடைபெற்ற நிகழ்வின்போது, இந்தத் திட்டத்தை அவா் தொடங்கினாா்.
- அரசு நிா்வாக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் பொதுமக்கள் இணையவழியிலேயே அரசு சேவைகளை விரைவாகவும், எளிமையாகவும் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- இதன் ஒரு பகுதியாக ‘எளிமை ஆளுமை’ எனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில், அரசின் முக்கியமான 10 சேவைகளை எளிதில் இணையம் வழியாகவே பெற முடியும்.
- TNPSC KEY NOTES : எளிமை ஆளுமை திட்டம்
DOGE துறையில் விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்:
- அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட DOGE துறையில் மஸ்க்கை நியமித்தார் ட்ரம்ப். அதிபர் தேர்தலில் ட்ரம்ப்புக்கு மஸ்க் உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆபரேஷன் ஷீல்ட்:
- ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், அரியானா மற்றும் சண்டிகர் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'ஆபரேஷன் ஷீல்டு' நடவடிக்கையின் கீழ், பொது பாதுகாப்பு பயிற்சிகளின் ஒரு பகுதியாக போர்க்கால ஒத்திகை நடத்தப்பட்டது.
- இந்த ஒத்திகையின்போது வான்வழி தாக்குதல்கள், டிரோன் தாக்குதல்கள் மற்றும் பிற போர்க்கால சூழ்நிலைகளை உருவகப்படுத்தும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
- முன்னதாக இந்த பயிற்சியை மே 29-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் அதனை ஒத்திவைத்த நிலையில் இன்று இந்த ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஒத்திகையின்போது பல இடங்களில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டது. காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர், அவசர காலத்தில் காயமடைந்தவர்களை மீட்பது தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டனர். இதற்கு முன்பாக கடந்த மே 7-ந்தேதி, நாடு முழுவதும் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் பொது பாதுகாப்பு பயிற்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்போட்டி 2025:
- 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென்கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. 43 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து பட்டியலில் 2-வது இடம் பிடித்தது.
- இது கடந்த 2023-ம் ஆண்டு கைப்பற்றிய பதக்க எண்ணிக்கையைவிட3 குறைவாகும். தாய்லாந்தில் நடைபெற்ற அந்த தொடரில் இந்தியா ஒட்டுமொத்தமாக 27 பதக்கங்கள் வென்றிருந்தது. ஆனால் இம்முறை இந்தியா கூடுதலாக 2 தங்கம் வென்றுள்ளது. 2023-ல் 6 தங்கம் வென்றிருந்த நிலையில் தற்போது 8 தங்கம் வென்று அசத்தி உள்ளது.
- சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்கள் குவித்து முலிடமும், ஜப்பான் 4 தங்கம், 10 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து 3-வது இடமும் பிடித்தன.
இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து பட்டியலில் 2-வது இடம் பிடித்தது:
- ஆண்கள் 20 கிமீ பந்தய நடைப்பயணம் சர்வின் செபாஸ்டியன் (வெண்கலம்)
- ஆண்கள் 10,000 மீ குல்வீர் சிங் (தங்கம்)
- ரூபால் சவுத்ரி (வெள்ளி) பெண்கள் 400 மீ
- ஆண்கள் 1500 மீ யூனஸ் ஷா (வெண்கலம்)
- பெண்கள் 1500 மீ +ஜா (வெள்ளி)
- டெகத்லான் - தேஜஸ்வின் சங்கர் (வெள்ளி)
- ஆண்கள் டிரிபிள் ஜம்ப் பிரவீன் சித்ரவேல் (வெள்ளி)
- கலப்பு 4×400 மீ ரிலே தங்கம்
- ஆண்கள் 3000 மீ ஸ்டீப்பிள்சேஸ் அவினாஷ் சேபிள் (தங்கம்)
- பெண்கள் 100 மீ தடை தாண்டுதல் ஜோதி யர்ராஜி (தங்கம்)
- பெண்கள் 4x400 மீ ரிலே தங்கம்
- ஆண்கள் 4x400 மீ ரிலே வெள்ளி
- பெண்கள் நீளம் தாண்டுதல் ஆன்சி சோஜன் (வெள்ளி)
- பெண்கள் நீளம் தாண்டுதல் ஷைலி சிங் (வெண்கலம்)
- ஆண்கள் 5000 மீ குல்வீர் சிங் (தங்கம்)
- பெண்கள் 3000 மீ ஸ்டீபிள்சேஸ் பறருல் சவுத்ரி (வெள்ளி, தேசிய சாதனையுடன்)
- பெண்கள் உயரம் தாண்டுதல் - பூஜா (தங்கம்)
- ஹெப்டத்லான் நந்தினி அகசாரா (தங்கம்)
- ஆண்கள் 200 மீ - அனிமேஷ் குஜூர் (வெண்கலம், தேசிய சாதனையுடன்)
- பெண்கள் 400 மீ தடை தாண்டுதல் வித்யா ராம்ராஜ் (வெண்கலம்)
- ஆண்கள் ஈட்டி எறிதல் சச்சின் யாதவ் (வெள்ளி)
- பெண்கள் 5000 மீ பருல் சவுத்ரி (வெள்ளி)
- பெண்கள் 800 மீ பூஜா (வெண்கலம்)
- பெண்கள் 4x100 மீ ரிலே வெள்ளி
ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் (COVID-19 JN.1 variant):
- தற்போது வேகமாக பரவி வரும் ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கும் அவசியமில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம்” என குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
- இது குறித்து இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு) தலைவர் டாக்டர். கே.ராஜேந்திரன் கூறியது: “நாட்டின் பல பகுதிகளில் தற்போது ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் புதிய வகை வேகமாக பரவி வருகிறது.
- இது ‘ஓமிக்ரான்’ வகையின் துணை உருவான வைரஸாகும். தற்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பொதுவான தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இருப்பினும் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
- ஜெஎன்.1 என்பது கரோனா வைரஸ் (ஓமிக்ரான்) வகையின் மாற்றம். இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இருந்தபோதும் பலருக்கு இவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பரவல் திறன் அதிகமாக இருந்தாலும், தீவிர தன்மை குறைவாகவே உள்ளது.
தேசிய அறிவுசார் சொத்து திருவிழா -2025:
- இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக, டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆர்-இந்திய பெட்ரோலிய நிறுவனம், 2025 மே 29 அன்று தேசிய அறிவுசார் சொத்து திருவிழா 2025-ஐக் கொண்டாடியது. இது விடுதலையின் அமிர்தப் பெருவிழா முயற்சியின் ஒரு பகுதியாகும். இது முதன்முதலில் 2023 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர்- இந்திய பெட்ரோலிய நிறுவனம், அறிவுசார் சொத்துரிமை மேலாண்மை குழும பொறுப்பாளர் டாக்டர் தீப்தி அகர்வால் தொடக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆர் -இந்திய பெட்ரோலிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹரேந்தர் சிங் பிஸ்ட் உரை நிகழ்த்தினார்.
- புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் -புதுமை கண்டுபிடிப்புகள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த டாக்டர் கபில் ஆர்யா, "அறிவுசார் சொத்துரிமைகளை உணருங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இது காப்புரிமையின் அடிப்படையை எடுத்துரைத்தது. அதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களுடன் உரையாடல் அமர்வு நடைபெற்றது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அறிவுசார் சொத்துரிமை குறித்த ஆன்லைன் விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான செயற்கை நுண்ணறிவு' கருத்தரங்கம்:
- இந்திய செயற்கை மூட்டு உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையானது 2025 மே 30 அன்று பெங்களூருவில் "மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான செயற்கை நுண்ணறிவு" என்ற கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
- இந்த முன் முயற்சி, மாற்றுத்திறனாளிகளுக்காக உள்ளடக்கிய, அணுகக்கூடிய, உதவக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவின் மாற்றத்தக்க பங்களிப்பை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த மாநாடு உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடையவர்களை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் குறித்து விவாதிக்க உதவும்.
- இம்மாநாடு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வாலின் சிறப்பு உரையுடன் தொடங்கும்.
- ஐஐடி தில்லி பேராசிரியர் பி.வி.எம். ராவ், அமெரிக்காவின் பஃபலோ பல்கலைக்கழக பேராசிரியர் வேணு கோவிந்தராஜு ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர்.
வட்டி மானியத் திட்டத்தை தற்போதுள்ள 1.5% வட்டி மானியத்துடன் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2025-26-ம் நிதியாண்டிற்கான மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ், வட்டி மானியம் தொடர்பான அம்சங்களைத் தொடர இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் என்பது வேளாண் கடன் அட்டை மூலம் குறைவான வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் கிடைப்பது உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ்:
- விவசாயிகள் வேளாண் கடன் அட்டைகள் மூலம் 7% மானிய வட்டி விகிதத்தில் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன்களைப் பெற்றுள்ளதுடன், தகுதியுள்ள கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 1.5% வட்டி மானியமும் வழங்கப்பட்டது.
- கூடுதலாக, கடன்களை உடனடியாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகள், வேளாண் கடன் அட்டை மூலம் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4% - மாகக் குறைக்கும் வகையில், உரியமுறையில் திருப்பிச் செலுத்துவதற்கான ஊக்கத்தொகை என 3% வரை ஊக்கத்தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
- கால்நடை வளர்ப்பு அல்லது மீன்பிடித் தொழிலுக்காக பிரத்தியேகமாக பெறப்பட்ட கடன்களுக்கு, வட்டி பலனாக ரூ.2 லட்சம் வரை பொருந்தும்.
இந்திய தொழில்துறை உற்பத்திக் குறியீடு ஏப்ரல் 2025 :
- 2025 ஏப்ரல் மாதத்திற்கான இந்திய தொழில்துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) வளர்ச்சி விகிதம் 2.7 சதவீதமாகும். இது 2025 மார்ச் மாதத்தில் 3.0 சதவீதமாக இருந்தது.
- 2025 ஏப்ரல் மாதத்தில் சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே (-)0.2 சதவீதம், 3.4 சதவீதம் மற்றும் 1.1 சதவீதம் ஆகும்.
- ஐஐபி-யின் விரைவு மதிப்பீடுகள் 2024 ஏப்ரல் மாதத்தில் 148.0 ஆக இருந்ததை விட 152.0 ஆக உள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தி குறியீடுகள் முறையே 130.6, 149.5 மற்றும் 214.4 ஆக உள்ளன.
- 2025 ஏப்ரல் மாதத்தில் முதல் மூன்று நேர்மறையான பங்களிப்பாளர்கள் - “அடிப்படை உலோகங்களின் உற்பத்தி” (4.9%), “மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் மற்றும் பகுதி அளவிலான டிரெய்லர்களின் உற்பத்தி” (15.4%) மற்றும் “இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றின் உற்பத்தி” (17.0%) ஆகும்.
- “மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் மற்றும் அரை டிரெய்லர்களின் உற்பத்தி”, “உதிரிபாகங்கள்”, “ஆக்சில்”, “வணிக வாகனங்கள்” ஆகியவை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் காட்டியுள்ளன.
ரூ.500 கள்ளநோட்டுப் புழக்கம் 37% அதிகரிப்பு: ஆர்பிஐ
- 500 ரூபாய் நோட்டு நாட்டில் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 37% கூடுதலாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
- 2024 - 25ஆம் நிதியாண்டில் மட்டும் நாட்டில் 1.18 லட்சம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 37 சதவீதம் அதிகம் என்றும் ஆர்பிஐ வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அது மட்டுமல்ல, வேறெந்த ரூபாய் நோட்டுகளையும் விட 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு 1.18 லட்சம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் என்ற நிலையில், கடந்த ஆண்டில் 85,711 தாள்கள் பிடிப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்பிஐ வெளியிட்ட விவரங்களின்படி, கடந்த நிதியாண்டில் 1.18 லட்சம் எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.5.88 கோடி.
- இதுமட்டுமல்ல, 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 51,000 எண்ணிக்கையிலும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 32,660 எண்ணிக்கையிலும் வங்கிகள் கண்டறிந்துள்ளன. 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 3,508 எண்ணிக்கையில் புழக்கத்தில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஒரே ஆறுதல் தகவல் என்னவென்றால், கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாகக் கண்டறியப்பட்ட கள்ள ரூபாய் நோட்டு எண்ணிக்கை 2.23 லட்சம் தாள்கள் என்ற நிலையில், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2.18 லட்சம் கள்ளநோட்டுகள் என்ற அளவில் குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, கடந்த 2018 - 19ஆம் நிதியாண்டு முதல் 2023 - 24ஆம் நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் கள்ள நோட்டு புழக்கமானது 300 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!