தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" (Tamil Nadu Assured Pension Scheme - TAPS)

TNPSC PAYILAGAM
By -
0
Tamil Nadu Assured Pension Scheme - TAPS




  • தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) முக்கிய அம்சங்கள்:

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் (Assured Pension):
  • 50% உறுதியான ஓய்வூதியம்: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்கள் கடைசியாகப் பெற்ற மாதச் சம்பளத்தில் 50 சதவீதம் தொகையானது ஓய்வூதியமாக வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். இதற்கான கூடுதல் நிதிச் சுமையை அரசே ஏற்கும்.(அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் (Average Basic Pay) 50% உறுதியான ஓய்வூதியமாக வழங்கப்படும்.)
  • பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஓய்வூதியம் மாறுபடும் நிலை இருந்தது. ஆனால் இத்திட்டத்தில் நிலையான தொகை உறுதியளிக்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு (Dearness Relief): 
  • பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, ஓய்வூதியதாரர்களுக்கும் ஆண்டுக்கு இரண்டு முறை (ஆறு மாதத்திற்கு ஒருமுறை) அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இது விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப ஓய்வூதியத் தொகையைச் சரிசெய்ய உதவும்.
குடும்ப ஓய்வூதியம் (Family Pension): 
  • ஓய்வூதியம் பெறும் ஊழியர் ஒருவேளை இயற்கை எய்தினால், அவர் பெற்று வந்த ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு (வாரிசுதாரர்களுக்கு) குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
பணிக்கொடை (Gratuity): 
  • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போதோ அல்லது பணிக்காலத்தில் எதிர்பாராத விதமாக இறக்க நேரிடும்போதோ, அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் (Minimum Pension): 
  • முழுமையான தகுதியான பணிக்காலத்தை (Qualifying Service) நிறைவு செய்யாமல் ஓய்வு பெறும் அலுவலர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படுவது இத்திட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் பலன் (Special Ex-gratia):
  • பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணியில் சேர்ந்து, இந்த TAPS திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னரே ஓய்வு பெற்று, ஓய்வூதியம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
நிதிச் சுமை: 
  • இந்தத் திட்டத்திற்காக, ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக ரூ.13,000 கோடியை ஒரே தவணையாகவும், ஆண்டுதோறும் சுமார் ரூ.11,000 கோடியை அரசு பங்களிப்பாகவும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

CPS vs TAPS: முக்கிய வேறுபாடுகள்:



ஒப்பீட்டு அம்சம்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS / NPS)தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)
1.ஓய்வூதியத் தொகைநிச்சயமற்றது. பங்குச்சந்தை மற்றும் முதலீட்டு வருவாயைப் பொறுத்து மாறுபடும்.உறுதியானது. ஓய்வு பெறும் போது வாங்கிய கடைசி மாத சம்பளத்தில் 50% கண்டிப்பாக வழங்கப்படும்.
2.அகவிலைப்படி (DA)கிடையாது. ஓய்வூதியத் தொகையில் பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்வு இருக்காது.உண்டு. பணியில் உள்ளவர்களுக்கு வழங்குவது போலவே, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
3.குடும்ப ஓய்வூதியம்குறைவானது அல்லது சந்தை மதிப்பைச் சார்ந்தது.உறுதியானது. ஊழியர் இறக்க நேரிட்டால், அவர் வாங்கிய ஓய்வூதியத்தில் 60% குடும்பத்திற்கு வழங்கப்படும்.
4.சந்தை அபாயம் (Risk)ஊழியர் சார்ந்தது. பங்குச்சந்தை சரிந்தால் ஓய்வூதியமும் குறைய வாய்ப்புள்ளது.அரசு சார்ந்தது. சந்தை நிலவரம் எப்படி இருந்தாலும், உறுதியளிக்கப்பட்ட தொகையைத் தர வேண்டியது அரசின் பொறுப்பு.
5.பணிக்கொடை (Gratuity)ஆரம்பத்தில் தெளிவற்ற நிலை இருந்தது (சில வரைமுறைகள் உண்டு).பணிக்காலத்திற்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6.குறைந்தபட்ச ஓய்வூதியம்உத்தரவாதம் இல்லை. கணக்கில் உள்ள தொகையைப் பொறுத்தது.தகுதியான பணிக்காலம் குறைந்திருந்தாலும், ரூ. 10,000 குறைந்தபட்ச ஓய்வூதியமாக வழங்கப்படும்.
7.முன் ஓய்வு பெற்றோர்CPS-ல் ஓய்வு பெற்று, போதிய ஓய்வூதியம் இல்லாமல் பலர் தவிக்கின்றனர்.
CPS-ல் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)