இந்திய விஞ்ஞானிகள் விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய, நீண்ட நேரம் நீடிக்கும் சோடியம் - அயன் பேட்டரியை வடிவமைத்துள்ளனர் :
- கார்கள் முதல் கிராமங்கள் வரை மின்மயமாக்கலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் உலகில், ஒரு அம்சம் மிக முக்கியமானது: அவை குறைந்த விலையிலான, விரைவான மற்றும் பாதுகாப்பான பேட்டரிகள் ஆகும். இதுவரை இந்தப் புரட்சிக்கு லித்தியம்-அயன் பேட்டரிகள் சக்தி அளித்திருந்தாலும், அவை விலை அதிகமாகும். மேலும், லித்தியம் வளங்கள் குறைவாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பெங்களூருவில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு சக்திவாய்ந்த மாற்றை கண்டுபிடித்துள்ளனர்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சிக் குழு, நாசிகோன் வகை எதிர் மின் முனை மற்றும் நேர் மின் முனை பொருளை அடிப்படையாகக் கொண்ட அதிவேக சார்ஜிங் சோடியம்-அயன் பேட்டரியை உருவாக்கியுள்ளது. இது ஆறு நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்து 3000 சார்ஜ் சுழற்சிகளுக்கு மேல் நீடிக்கும்.
- தாமதமான சார்ஜிங் மற்றும் குறுகிய ஆயுட்காலத்தால் பாதிக்கப்படும் வழக்கமான சோடியம் அயன் பேட்டரிகளை போலன்றி, இந்தப் புதிய பேட்டரி வேதியியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்திறன் கலவையைப் பயன்படுத்துகிறது.
சன்சத் ரத்னா விருது 2025 :
- நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்கள் ‘சன்சத் ரத்னா 2025’ விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தைச் சோ்ந்த ஒரு எம்.பி.க்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
- பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு, தகுதியான எம்.பி.க்களை தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணைய (என்சிபிசி) தலைவா் ஹன்ஸ்ராஜ் அஹிா் தலைமையிலான தோ்வுக்குழு தோ்வு செய்தது.
- மஹ்தாப் மற்றும் சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் சரத் பவாா் பிரிவு), என்.கே.ரேமசந்திரன் (புரட்சிகர சோஷலிஸ கட்சி), ஸ்ரீரங் பாா்னே (சிவசேனை ஷிண்டே பிரிவு) ஆகிய 4 எம்.பி.க்கள் 16-ஆவது, 17-ஆவது மற்றும் நடப்பு 18-ஆவது மக்களவையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். எனவே, இவா்கள் நால்வருக்கும் ‘நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு சிறப்பான மற்றும் தொடா்ச்சியான பங்களிப்பு’ என்ற விருது வழங்கப்படவுள்ளது.
- இவா்கள் தவிர ஸ்மிதா வாக் (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனை உத்தவ் பிரிவு), நரேஷ் கண்பத் (சிவசேனை ஷிண்டே பிரிவு), வா்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்), மேதா குல்கா்னி (பாஜக), பிரவீண் படேல் (பாஜக), ரவி கிஷன் (பாஜக), நிஷிகாந்த் துபே (பாஜக), வித்யுத் பாரன் மஹாதே (பாஜக), பி.பி.சௌதரி (பாஜக), மதன் ரத்தோா் (பாஜக), சி.என்.அண்ணாதுரை (திமுக) மற்றும் திலீப் சைகியா (பாஜக) ஆகியோரும் சன்சத் ரத்னா விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
- முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசனையின்பேரில் சன்சத் ரத்னா விருதுகள் முதல்முறையாக 2010-ஆம் ஆண்டில் பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மற்றும் இ-பத்திரிகையான பிரீசென்ஸ் ஆகியவற்றால் நிறுவப்பட்டன. இதன் முதல் விருது வழங்கும் விழாவை சென்னையில் அப்துல் கலாம் தொடங்கி வைத்தாா். முதல் விருதை ஹன்ஸ்ராஜ் அஹிா் பெற்றாா். 2024 நிலவரப்படி 125 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம், இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் -பிரதமர் நரேந்திர மோடி :
- ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார சபையின் 76வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இருந்தவாறு காணொலி வாயிலாக (20.05.2025) உரையாற்றினார்.
- இதில், உலக சுகாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதில் சுகாதாரத்தில் அரசின் முன்னெடுப்புகள் குறித்து மோடி பேசியதாவது,நாங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மக்களுக்காக கொண்டுவந்துள்ளோம். இது உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டமாகும். இதில் 58 கோடி மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. 70 வயதுடையோருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் வகையில் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- ஜூன் 11ஆம் தேதி சர்வதேச யோகா நாள் வருகிறது. ’ஒரே உலகம்; ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்பதை இந்த ஆண்டு யோகாவின் கருப்பொருளாக எடுத்துள்ளோம். இதில் அனைத்து நாடுகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கவுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்:
- அரசு ஊழியர்களின் நலனிலும் அவர்தம் குடும்பத்தினரின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பினை இவ்வாண்டு முதலே வழங்க உத்தரவு வழங்கியும், அரசு ஊழியர்களின் நலன்காக்க பல்வேறு சலுகைகளையும் இச்சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார்.
- நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினையும், விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம், இரண்டு மகள்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும், விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர் கல்வி பயின்றிடும் மகளின் உயர் கல்விக்கான உதவித்தொகையாக 10 லட்சம் ரூபாய் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்கள்.
- மேற்குறிப்பிட்ட இச்சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக்கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கிட முன்வந்துள்ளன.
- மேலும், இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.
- இந்தச் சலுகைகளை வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டன.
அம்ரித் பாரத் திட்டம்:
- நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களின் சீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.24,470 கோடி செலவில் ரயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- தெற்கு ரயில்வேயில் 40-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இந்த நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி மே 22-ல் திறந்து வைக்கவுள்ளார்.
- சென்னை பரங்கிமலை, சிதம்பரம், திருவண்ணாமலை, சாமல்பட்டி, ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை உள்பட 12-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
- அமிர்த பாரத் நிலையத் திட்டம் என்பது, நாடு முழுவதும் 1275 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பதற்காக ரயில்வே அமைச்சகத்தால் பிப்ரவரி 2023 இல் தொடங்கப்பட்ட இந்திய ரயில்வேயின் ஒரு பணியாகும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க மத்திய அரசு நியமித்துள்ள எம்பிக்கள் குழு:
- பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது.
- இந்தக் குழு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகளுக்கும் பயணிக்கவுள்ளது.
- பாஜக எம்.பி.க்கள் ரவி சங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி.சசி தரூா், திமுக எம்.பி.கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி.சுப்ரியா சுலே, ஐக்கிய ஜனதா தள எம்.பி.சஞ்சய் ஜா, சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகிய 7 போ் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுக்கு தலைமைத் தாங்குகின்றனா்.
- 7 குழுக்கள்: பாஜக எம்.பி.க்கள் ரவி சங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, ஐக்கிய ஜனதா தள எம்.பி.சஞ்சய் ஜா, சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே, காங்கிரஸ் எம்.பி.சசி தரூா், திமுக எம்.பி.கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி.சுப்ரியா சுலே ஆகிய 7 போ் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4 குழுக்களுக்கு ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளம்-சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.க்களும், 3 குழுக்களுக்கு ‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்-திமுக-தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி.க்களும் தலைமை வகிக்கின்றனா். ஒவ்வொரு குழுவிலும் 6 முதல் 7 எம்.பி.க்கள் வரை இடம்பெறுவா் எனவும் அந்தக் குழுக்கள் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் "ஒரு பதவி ஒரு ஒய்வூதியம்" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:
- உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாகுபாடின்றி ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஓய்வூதியம் வழங்குவதில் வேறுபாடு என தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
- அந்த நேரம் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கையில், "மாவட்ட நீதிபதியாக இருந்தோ அல்லது வழக்கறிஞர்களாக இருந்தோ உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்பட்டாலும், ஓய்வுபெற்ற அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் "ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்" என்ற கொள்கை பொருந்தும்" என்று தெரிவித்தது.
- மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள்,"உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.
- உயர்நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருக்கும்போதே இறந்தால், அவர் நிரந்தரமாகப் பணியாற்றினாலும் அல்லது கூடுதல் பொறுப்பில் இருந்தாலும், அவரது மனைவி அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மத்திய அரசு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்" என்று அறிவித்துள்ளது.
மாலத்தீவில் இந்தியா புரிந்துணா்வு ஒப்பந்தம்:
- மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55.28 கோடியில் செயல்படுத்தப்படும் 13 நலத்திட்டங்கள் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கு இடையே கையொப்பமானது.
- மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டபோது, அதிக தாக்கமுள்ள சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் (எச்ஐசிடிபி) 3-ஆவது கட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘இந்த 3-ஆவது கட்ட திட்டத்தின்கீழ் ரூ.55.28 கோடி நிதியுதவியுடன் மாலத்தீவு மக்களின் உயிா்நாடியான கடல்சாா் இணைப்பை மேம்படுத்துவதில் அந்நாட்டு அரசுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது’ என்று மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
- 9 தீவு கூட்டங்களில் உள்ள 81 தீவுகளை இணைக்கும் வகையில் தேசிய அளவிலான அதிவேக படகு பேக்குவரத்தைச் சேவையை நிறுவுவதில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இப்போது இந்தியாவுடன் கையொப்பமாகியுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இந்த சேவையை விரிவுபடுத்தும். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்
நீா்மூழ்கிக்கப்பல் தாக்குதலை தடுக்கும் தொழில்நுட்பம்:
- நீா்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்களை தயாரிப்பதற்காக அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்பாா்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக தொழிலதிபா் அதானியின் நிறுவனம் தெரிவித்தது. அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
- ஸ்பாா்டன் நிறுவனத்துடன் இணைந்து நீா்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையிலான மின்னணு சென்சாா்கள், திசைகாட்டும் அமைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை இந்திய கடற்படைக்கு பயன்படும் விதத்தில் அதானி நிறுவனம் மேம்படுத்தவுள்ளது.
- ‘ஆத்மநிா்பா் பாரத்’ மற்றும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ ஆகிய முன்னெடுப்புகளின்கீழ் சோனோபோய்கள் ( நீருக்கடியில் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களை கண்டறியும் மின் இயந்திர ஒலி உணரி) இந்தியாவிலேயே ஒருங்கிணைக்கப்படவுள்ளன’ என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே சோனோபோய்கள் தயாரிக்கும் முதல் தனியாா் நிறுவனம் என்ற பெருமையை அதானி நிறுவனம் பெற்றுள்ளது.
உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசை 2025:
- 180 நாடுகளில் ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ்’ நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 151-ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த குறியீட்டில் கடந்தாண்டு 159-ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 8 இடங்கள் முன்னேறியுள்ளது.
- இந்தக் குறியீட்டில் முதல் மூன்று இடங்களை முறையே ஃபின்லாந்து, எஸ்தோனியா மற்றும் நெதா்லாந்து ஆகிய நாடுகள் கைப்பற்றியுள்ளன.
- இந்தக் குறியீட்டில் அமெரிக்கா 57-ஆவது இடத்திலும் ஆஸ்திரேலியா 29-ஆவது இடத்திலும் கனடா 21-ஆவது இடத்திலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
- உலகம் முழுவதும் பத்திரிகையாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள் உள்பட 5,000 நபா்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு இந்த தரவரிசை தயாா் செய்யப்பட்டுள்ளதாக புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்நிறுவனத்தின் துணை இயக்குநா் திபாட் புருட்டின் தெரிவித்தாா்.
பிரிக்ஸ் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டம் 2025:
- மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால், பிரேசிலின் தலைமையின் கீழ், மே 19, 2025 அன்று பிரேசிலியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்திற்கான இந்தியக் குழுவிற்கு தலைமை தாங்கினார்.
- மத்திய அமைச்சர் எரிசக்தி பாதுகாப்பை தற்போதைய மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக எடுத்துரைத்தார், மேலும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், உலகளவில் எரிசக்தி வளங்களுக்கு சமமான அணுகலை ஊக்குவிப்பதற்கும் பிரிக்ஸ் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
- நிலையான மற்றும் உள்ளடக்கிய எரிசக்தி எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் 'மேலும் உள்ளடக்கிய மற்றும் நிலையான நிர்வாகத்திற்கான உலகளாவிய தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளின் கீழ் பிரேசிலின் தலைமையைப் பாராட்டினார்.
பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி! - இஸ்ரோ அறிவிப்பு:
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து (18.05.2025 விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கை சென்றடையவில்லை. ராக்கெட்டின் மூன்றாம் நிலையை விடுவிக்கும்போது அப்பிரச்னை கண்டறியப்பட்டது என்றும், அதில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் இஸ்ரோ தலைவா் நாராயணன் தெரிவித்தாா்.
- இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணா்வு பயன்பாட்டுக்காக காா்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட், உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு, விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ் -09 ரிசாட் 1பி எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இதன் மூலம் ராணுவ பாதுகாப்பு, வேளாண்மைக்கான தகவல்களைப் பெற முடியும் எனக் கூறப்பட்டது.
ரோமானியா சூப்பர்பெட் செஸ் கிளாசிக் போட்டி - பிரக்ஞானந்தா சாம்பியன்:
- ரோமானியாவின் புகாரெஸ்ட் நகரில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் போட்டிகள் நடந்து வந்தன. இப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா 9 சுற்றுகள் முடிவில், 5.5 புள்ளிகள் பெற்றார்.
- அவரைப் போல், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரும் பிளிட்ஸ் செஸ் முன்னாள் உலக சாம்பியனுமான மேக்சிமா வஸியெர் லக்ரேவ், ஈரான் கிராண்ட் மாஸ்டர் அலிரெஸா ஃபிரோஸ்ஜா ஆகியோரும் 5.5 புள்ளிகள் பெற்றதால்,
- யாருக்கு முதலிடம் என்பதை தீர்மானிக்க டைபிரேக்கர் போட்டிகள் நடத்தப்பட்டன. பிரக்ஞானந்தா ஃபிரோஸ்ஜா இடையே நடந்த போட்டி டிரா ஆனது.
- அதைத் தொடர்ந்து, ஃபிரோஸ்ஜா மேக்சிமா இடையே நடந்த போட்டியும் டிரா ஆனது. அதையடுத்து, மேக்சிமாவுடன் நடந்த போட்டியில் பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றதால் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டிகளில் உலக செஸ் சாம்பியன் குகேஷ் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று 9ம் இடம் பிடித்தார்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN MAY 2025 IN TAMIL :
உலக அளவியல் தினம் (World Metrology Day):
- 1875 ஆம் ஆண்டு மீட்டர் ஒப்பந்தம் கையெழுத்தானதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று அளவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
- மீட்டர் மாநாடு என்பது பாரிஸில் கையொப்பமிடப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும், இது அளவீட்டு அலகுகள் மீதான சர்வதேச ஒப்பந்தத்திற்கான அடிப்படையை நிறுவியது.
- உலக அளவியல் தினத் திட்டம் என்பது BIPM மற்றும் OIML ஆகியவை இணைந்து உருவாக்கிய யோசனையாகும்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!