தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைத் துறையின் திட்டங்கள் மற்றும் சாதனைகள்

TNPSC PAYILAGAM
By -
0

 

Schemes of the Hindu Religious Endowments Department


தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைத் துறையின்  திட்டங்கள் மற்றும் சாதனைகள்  - ஒரு பார்வை : 


அன்னைத் தமிழில் வழிபாடு :

  • திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 48 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டது. அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 சதவிகிதத் தொகை பங்குத் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் 14 போற்றி நூல்களை அச்சிட்டு வழங்கி திராவிட மாடல் அரசு இத்திட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
யுனெஸ்கோ விருது  :
  • தஞ்சை மாவட்டம், கும்பகோணம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு மரபு சார்ந்த கட்டடக் கலையினை பாதுகாக்கும் பொருட்டு நவீன அறிவியல் உதவியுடன் பாரம்பரியம் மாறாமல் திருக்கோயிலை புனரமைத்தற்காக கலாச்சார பாரம்பரிய புனெஸ்கோ ஆசிய, பசிபிக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோச் விருது:  
  • புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஸ்கோச் குரூப் நிறுவனமானது (SKOCH GROUP) மக்களின் மேம்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான அரசுத்துறை நிறுவனங்களுக்கான ஸ்கோச் தங்க விருதினை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இணையதள சேவையான ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்திற்கு 29.03.2025 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.
உணவுத்தரச்சான்று
  • ஒன்றிய அரசால் திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் தரச்சான்றிதழ் திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தரச்சான்றிதழ் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகப் பயணம் 
  • மானசரோவர் முக்திநாத் ஆன்மிகப் பயணம் இறையன்பர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் தற்போது உயர்த்தி வழங்கப்படுகிறது. அதேபோல, 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் 2,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கும், 920 பக்தர்கள் இராமேசுரம் காசி ஆன்மிக பயணத்திற்கும் அரசு செலவில் அழைத்துச் செல்லப்பட்டனர். 
நாள் முழுவதும் பிரசாதம்
  • நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 25 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடுதல்
  • இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவின் மூலம் திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணம், கட்டடக்கலை, கல்வெட்டுகள் குறித்த 516 தொன்மையான அரிய நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளன.
வள்ளலார் முப்பெரும் விழா
  • அருள்பிரகாச வள்ளலாரின் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள், தர்மசாலை தொடங்கப்பட்ட 156 வது ஆண்டு, ஜோதி தரிசனத்தின் 152 வது ஆண்டு ஆகிய வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்திப் போற்றும் முப்பெரும் விழா 2022 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 52 வாரங்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல் வார விழாவில் பங்கேற்று வள்ளலார் 200 இலச்சினை, அஞ்சல் உறை, சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டார்கள். 
திருவள்ளுவருக்கு கற்கோயில் 
  • 27.4.1973 அன்று முத்தமிறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி, முடிவுற்ற மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் திருப்பணி தற்போது  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கையின் ரூ.19.17 கோடியில் கற்கோயிலாக கட்டப்பட்டு வருகிறது.
தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம்  
  • நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினத்தில் அருள்மிகு ஔவையார் திருக்கோயிலில் ரூ.18.95 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணி
  • ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் 2022-2023 ஆம் நிதியாண்டு முதல் 2024-
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு
  • தமிழ் கடவுளாம் முருகப்பெருமானின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 
அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பணி
  • சாதி வேறுபாடுகளை அகற்றும் வழிகளில் ஒன்றாக இறைத் தொண்டு புரியும் பணி அனைத்துச் சாதியினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்துடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தினை 1972 ஆம் ஆண்டில் நிறைவேற்றினார்கள். அச்சட்டம்  இந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)