2025 மே மாதத்தில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்:
- கடந்த மே மாதத்தில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் 17 வகையான வரிகள், 13 வகையான செஸ் வரிகள் விதிக்கப்பட்டு வந்தன. இதற்கு பதிலாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.2.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது. மே மாதம் ரூ.1.73 லட்சம் கோடி, ஜூன் மாதம் ரூ.1.74 லட்சம் கோடி, ஜூலையில் ரூ.1.82 லட்சம் கோடி, ஆகஸ்டில் ரூ.1.75 லட்சம் கோடி, செப்டம்பரில் ரூ.1.73 லட்சம் கோடி, அக்டோபரில் ரூ.1.87 லட்சம் கோடி, நவம்பரில் ரூ.1.77 லட்சம் கோடி, டிசம்பரில் ரூ.1.77 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது.
- நடப்பாண்டு ஜனவரியில் ரூ.1.96 லட்சம் கோடி, பிப்ரவரியில் ரூ.1.84 லட்சம் கோடி, மார்ச் மாதம் ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலானது. கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவாக ரூ.2.37 லட்சம் கோடியை தொட்டது. இந்த சூழலில் கடந்த மே மாதம் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது.
- இது கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடும்போது 16.4 சதவீதம் அதிகம் ஆகும். மே மாதத்தில் உள்ளூர் பரிவர்த்தனைகள் மூலமாக ரூ.1.9 லட்சம் கோடியும், இறக்குமதி பொருட்கள் மூலமாக ரூ.46,913 கோடியும் ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்திருக்கிறது.
சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு:
- சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027 மார்ச் மாதம் தொடங்கும் என்றும், இரண்டு கட்டங்களாக அது நடத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 1 ஆக இருக்கும்.
- லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 1 ஆக இருக்கும்.
- மேலே குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3-ன்படி, ஜூன் 16-ம் தேதி (தோராயமாக) அன்று அரசிதழில் வெளியிடப்படும்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக 2011-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை) நடத்தப்பட்டன. இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01. ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 1 ஆக இருந்தது.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது. இருப்பினும் நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலக விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு 2025:
- சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் 81-வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
- தற்போதைய சூழலில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய உள்நாட்டு விமான சந்தையாக இந்தியா உருவெடுத்திருக்கிறது
- இந்தியாவில் ஆண்டுதோறும் 35 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன
- கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது 162 ஆக அதிகரித்துள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் 2,000- க்கும் மேற்பட்ட புதிய பயணிகள் விமானங்களை வாங்க ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளன.
- இந்தியாவில் பணியாற்றும் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இது சர்வதேச சராசரியைவிட அதிகம் ஆகும்.
- இந்தியாவில் தற்போது ஓராண்டில் 24 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். அதாவது 2030-ம் ஆண்டு முதல் ஓராண்டில் 50 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்வர்.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
தென்பகுதி நாடுகள் ஒத்துழைப்பின் மூலம் வேளாண் மாற்றத்தை ஊக்குவிக்க புதிய உயர் சிறப்பு மையம் தொடக்கம்:
- பாதியளவு வறண்ட வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனமான இக்ரிசாட்(ICRISAT- The International Crops Research Institute for the Semi-Arid Tropics), வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புடன்(Research and Information System for Developing Countries (RIS)) இணைந்து, புதுதில்லியில் நடைபெற்ற உலகளாவிய தென்பகுதி நாடுகள் ஒத்துழைப்பு குறித்த மாநாட்டின் போது, வேளாண்மையில் தென்பகுதி நாடுகள் ஒத்துழைப்புக்கான இக்ரிசாட் உயர் சிறப்பு மையத்தை நிறுவுவதாக(ICRISAT Centre of Excellence for South-South Cooperation in Agriculture (ISSCA) ) அறிவித்துள்ளது. இந்த முயற்சி உலகளாவிய தென்பகுதி நாடுகளின் வேளாண் கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த அறிமுக விழாவில் இக்ரிசாட், தக்ஷின் எனப்படும் வளர்ச்சி மற்றும் அறிவு பகிர்வு முன்முயற்சிக்கு இடையே ஒரு உத்திசார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த உயர் சிறப்பு மையம் நிறுவப்படுவது உலகளாவிய வேளாண் வளர்ச்சிக்கு ஒரு சிறப்பு தருணமாக அமையும். அறிவைப் பரிமாறிக் கொள்ளவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைந்த வேளாண் முறைகளை மேற்கொள்ளவும், பருவநிலை மற்றும் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளிடையே ஒத்துழைப்பை உருவாக்கவும் ஒரு பிரத்யேக தளமாக இந்த மையம் அமையும்.
இந்தியா முதலாவது துருவ ஆராய்ச்சி கப்பலை கட்டமைப்பதற்காக நார்வேயின் காங்ஸ்பெர்க்குடன் ஜிஆர்எஸ்இ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது:
- நார்வேயின் காங்ஸ்பெர்க்குக்கும்(Norway’s Kongsberg Oslo) , கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டுபவர்களுக்கும் ( Garden Reach Shipbuilders and Engineers Limited (GRSE)) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கலந்து கொண்டார்.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா தனது முதலாவது துருவ ஆராய்ச்சி கப்பலை ( First-Ever Polar Research Vessel)உள்நாட்டிலேயே கட்டுவதற்கு வழி வகுக்கிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்த சோனோவால், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கட்டும், இது அறிவியல் முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் குறிக்கிறது என்று தெரிவித்தார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவியல் கண்டுபிடிப்பை வளர்ப்பதற்கும், துருவ மற்றும் கடல் ஆராய்ச்சியில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்துவதற்கும், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிப்பதற்கும் ஒரு உறுதிப்பாடாகும் என்று அவர் கூறினார்.
- மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், உலகளாவிய கடல்சார் துறையின் தலைவர்களுடனான கடல்சார் உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நோக்கத்துடன், நார்வேக்கும், டென்மார்க்கிற்கும் ஐந்து நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சென்றுள்ளார்.
பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது:
- பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரை செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, தமிழ்நாடு அரசிடம் கடந்தாண்டு சமர்பிக்கப்பட்டது.
- இந்த வழித்தடம் தோராயமாக 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்நிலை மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
- முதல்கட்டமாக பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமையவுள்ளது. ரூ.8,779 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் 2025 :
- நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்களில் ஆர்சிபி வென்றது.
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
- இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
- பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களில் அடங்கியது.
- பின்னர், 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டி 2025 :
- தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றது.
- இறுதிச்சுற்றில், ஆடவருக்கான 75 கிலோ பிரிவில் தீபக் 5-0 என உஸ்பெகிஸ்தானின் அப்துரகிமோவ் ஜவோகிரையும், ஆடவா் 90 கிலோ பிரிவில் நமன் தன்வா் 4-1 என சீனாவின் ஹான் ஜுயுஸெனையும் வீழ்த்தி சாம்பியனாகினா்.
- மகளிருக்கான 80+ கிலோ பிரிவில் கிரண் 2-3 என கஜகஸ்தானின் யெல்டனா டலிபோவாவிடம் தோற்று வெள்ளி பெற்றாா்.
- இது தவிர, தமன்னா (51 கிலோ), பிரியா (57 கிலோ), சஞ்சு (60 கிலோ), சனே (70 கிலோ), லால்ஃபக்மாவி ரால்டே (80 கிலோ) ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
- இப்போட்டியில் மொத்தம் இந்தியாவின் சாா்பில் 19 போட்டியாளா்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
நார்வே செஸ் போட்டி 2025:
- நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்செனை இந்திய வீரர் டி.குகேஷ் தோற்கடித்துள்ளார்.
- நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியா சார்பில் டி. குகேஷ், அர்ஜுன் எரிகைசி பங்கேற்றுள்ளனர்.
- இந்த போட்டியின் ஆறாவது சுற்றில், 5 முறை உலக சாம்பியனான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்செனை குகேஷ் எதிர்கொண்டார்.
- ஆட்டத்தின் தொடக்கம் முதல் மேக்னஸ் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இறுதியில் சமர்த்தியமாக விளையாடிய குகேஷ் வெற்றியை பதிவு செய்தார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!