2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி -ஐநா அறிக்கை :
- 2025-இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது.
- கடந்த ஜனவரி மாதம் உலக நாடுகளின் பொருளாதார சூழல் குறித்து ஐதா வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதார வளர்ச்சி சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 63 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- அதேபோல் 2026-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் எனவும் ஐதா தெரிவித்துள்ளது.
- நிகழாண்டுக்கான 'உலக நாடுகளின் பொருளாதார சூழல்-2025' என்ற இரண்டாவது அறிக்கையை ஐநா வெளியிட்டது.
- அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அதிக தனியார் துகர்வு மற்றும் பொது முதலீடு, ஏற்றுமதி என வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. பிறநாட்டு பொருள்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பால் உலகளவிலான விநியோக சங்கிலிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- மருத்துகள், மின்னணு சாதனங்கள், செமிகண்டக்டர்கள், எரிசக்தி உள்ளிட்ட சில பொருள்கள் மீதான வரிவதிப்புக்கு அமெரிக்க விலக்களித்திருந்தாலும் இது தற்காலிக மிக நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
- தொடரும் வேலையின்மை குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் இந்தியா பயணித்தாலும் வேலையின்மை பிரச்னை தொடர்ந்து வருகிறது. மேலும். இந்தியாவில் பணியிடங்களில் பாலின சமத்துவமின்மையை குறைக் வேண்டியது அவசியமானது.
- பணவீக்கம், இந்தியாவில் 2024- இல் பணவீக்கம் 4.9 சதவிதமாக இருந்த நிலையில், 2025-இல் 4 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பணவீக்கம் குறைவதற்கான வாய்ப்புள்ளதால் தெற்காசிய பிராந்தியத்தில் பணவியல் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
- உலகப் பொருளாதாரம்: 2024-இல் உலகப் பொருளாறார வளர்ச்சி 2.9 சதவீதமாக இருந்த நிலையில் 2025-இல் அதன் வளர்ச்சி 2.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஜனவரி மாதம் கணிக்கப்பட்டதைவிட 0.4 சதவீதம் குறைவாகும்.
ட்ரோன்களை எதிர்கொண்ட இந்திய வான்வழி பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஆயுதங்கள் :
- ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவம் இந்திய நகரங்களை குறிவைக்க முயன்றபோது, 600க்கும் மேற்பட்ட அந்நாட்டு ட்ரோன்கள் இந்திய பாதுகாப்புப் படைகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
- பாகிஸ்தானின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் ஒரு விரிவான வான் பாதுகாப்பு குடையை செயல்படுத்தின. இதற்காக எல்லை கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை இந்திய ராணுவம் பயன்படுத்தியது. பெரிய வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட 750க்கும் மேற்பட்ட தரையிலிருந்து தாக்கும் வான் ஏவுகணை (SAM) அமைப்புகளும் பயன்படுத்தப்பட்டது.
- இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்திறன், இந்திய எல்லைக்குள் ஊடுருவும் அனைத்தையும் கண்காணித்து, தகவல் அனுப்பும் ஆகாஷ் திர் அமைப்பின் மூலம் மேம்படுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, விமானப்படையின் ஒருங்கிணைந்த வான்வழி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (IACCS) ஆகியவை ஆகாஷ் திர் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டன.
- பாகிஸ்தான் ட்ரோன் அல்லது ஏவுகணை வருவதைக் கண்டறிந்தவுடன், தகவல் உடனடியாக IACCS-லிருந்து ஆகாஷ் திர் கட்டளை இடுகைக்கு அனுப்பப்பட்டது. இந்த தடையற்ற தகவல் ஓட்டம் ஒவ்வொரு வான்வழி அச்சுறுத்தலையும் துல்லியமாக எதிர்கொண்டு முறியடித்தது.
- L-70 வான்வழி பாதுகாப்பு துப்பாக்கி: 1970-களில் ஸ்வீடனில் இருந்து முதலில் வாங்கப்பட்ட இந்த துப்பாக்கி, நிமிடத்திற்கு 300 சுற்றுகளுக்கு மேல் அதிக தீ விகிதத்தையும் 3 முதல் 4 கிலோமீட்டர் வரையிலான வரம்பையும் கொண்டுள்ளது. சமீபத்திய மேம்படுத்தல்களின்படி இந்த துப்பாக்கிகளில் மேம்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட சென்சார்கள், கேமராக்கள் மற்றும் ரேடார் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இது நவீன வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக பகல் மற்றும் இரவு நேரங்களில் செயல்பட உதவுகிறது.
- Zu-23mm துப்பாக்கி: 1980களின் முற்பகுதியில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இந்த இரட்டை-பேரல் துப்பாக்கி, நிமிடத்திற்கு 3200 முதல் 4000 சுற்றுகள் வரை (ஒரு பேரலுக்கு நிமிடத்திற்கு 1600-2000 சுற்றுகள்) சுடும் திறனைக் கொண்டுள்ளது. கைமுறையாக இயக்கப்படும் இது, 2 முதல் 2.5 கிலோமீட்டர் வரை செயல்படும் அடர்த்தியான தீத் திரையை வழங்குகிறது.
- ஷில்கா துப்பாக்கி அமைப்பு: இந்த அமைப்பு Zu-23 இன் இரட்டை 23mm தானியங்கி பீரங்கிகளை தளத்தில் ஒருங்கிணைக்கிறது. ஒரு வாகனத்திற்கு இரண்டு Zu-23mm துப்பாக்கிகளுடன், ஷில்கா நிமிடத்திற்கு 8000 சுற்றுகளை சுடும் திறனைக் கொண்டுள்ளது.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? - குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்:
- மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று வினவி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் 14 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
- தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆளுநர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.
1) ஒரு மசோதாவை ஆளுநரிடம் சமர்ப்பிக்கும்போது, அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன?
2) ஒரு மசோதாவை ஆளுநர் முன் சமர்ப்பிக்கும்போது, அமைச்சர்கள் குழுவால் வழங்கப்படும் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?
3) இந்திய அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
4) பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு பிரிவு 361 ஒரு முழுமையான தடையா?
5) அரசியலமைப்பு ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடு மற்றும் ஆளுநரால் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், பிரிவு 200 இன் கீழ் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா மற்றும் நீதித்துறை உத்தரவுகள் மூலம் செயல்படுத்தும் முறையை பரிந்துரைக்க முடியுமா?
6) இந்திய அரசியலமைப்பின் பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
7) அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் நீதித்துறை உத்தரவுகள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட முறையில் செயல்பட முடியுமா?
8) குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்புத் திட்டத்தின் அடிப்படையில், ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அல்லது வேறுவிதமாக ஒதுக்கி வைக்கும்போது, பிரிவு 143 இன் கீழ் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையையும், கருத்தையும் பெற கடமைப்பட்டுள்ளாரா?
9) சட்டப் பிரிவுகள் 200 மற்றும் 201 இன் கீழ் ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பு வழங்க அனுமதிக்கப்படுகிறதா?
10) இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 இன் கீழ் அரசியலமைப்பு அதிகாரங்களையும் குடியரசுத் தலைவர் / ஆளுநரின் உத்தரவுகளையும் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?
11) மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?
12) இந்திய அரசியலமைப்பின் பிரிவு 145(3) இன் விதிமுறையைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் எந்தவொரு அமர்வும், அதன் முன் உள்ள நடவடிக்கைகளில் உள்ள கேள்வி, அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?
13) அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின்/ஆளுநரின் உத்தரவுகளையும் பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?. முரணான உத்தரவுகளை பிறப்பித்தல்/ஆணைகளை பிறப்பித்தல் வரை பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா?
14) பிரிவு 131 இன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்கிறதா?
தீர்ப்பின் விவரம்: முன்னதாக தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8 அன்று தீர்ப்பு வழங்கியது.
அதன் முக்கிய அம்சங்கள்: > சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது, அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அவர் ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது.
> பிரிவு 200-ன்படி, முதல் முறையாக மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அவ்வாறு பரிந்துரைத்து மீண்டும் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சபை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்க வேண்டும்.
> அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது.
> குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் கருதுகிறது.
> ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்துக்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம்.
> ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க / ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. பொது விதியாக, ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது.
> ஆளுநர் மாநிலத்தின் முறையான தலைவர் என்றும் அவர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ் தனது அதிகாரங்களை பயன்படுத்துகிறார் என்றும் கடந்த கால அரசியலமைப்பு அமர்வு முடிவுகளை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பதவியை ராஜினாமா செய்த 7-வது பெண் நீதிபதி :
- உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம்.திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாற்றில் பதவியை ராஜினாமா செய்த 7-வது பெண் நீதிபதி ஆகிறார்.
- ஆகஸ்ட் 31, 2021 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பேலா எம்.திரிவேதி பதவியேற்றார். அவருடன் மூன்று பெண்கள் உட்பட 9 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். உச்ச நீதிமன்றத்தின் 11-வது பெண் நீதிபதியான அவர், மூன்றரை ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
- 1995-இல் குஜராத்தில் விசாரணை நீதிமன்ற நீதிபதியாக பணிபுரியத் தொடங்கிய பேலா எம்.திரிவேதி, அதில் இருந்து படிப்படியாக உயர்வு பெற்று பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்ட அரிய பெருமையை பெற்றவர். உச்ச நீதிமன்றத்தின் பல முக்கிய தீர்ப்புகளில் பேலா எம்.திரிவேதி ஒரு பகுதியாக இருந்துள்ளார். ஜூன் 10, 1960 அன்று குஜராத்தில் உள்ள படானில் பிறந்த நீதிபதி பேலா எம்.திரிவேதி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் சுமார் 10 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். பின்னர், 1995-இல் அகமதாபாத்தில் உள்ள நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சமுத்ரயான் திட்டம்:
- ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என என்ஐஓடி இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- சமுத்ரயான் திட்டத்தின் கீழ் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்ஐஓடி இந்த திட்டத்தைச் செயல்படுத்தும். ‘மட்ஸ்யா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி நீர்மூழ்கி வாகனம் தயாரிக்கப்படுகிறது.
- உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இது 25 டன் எடை கொண்ட 4-வது தலைமுறை வாகனம் ஆகும். ஆழ்கடலின் தீவிர அழுத்தம் மற்றும் வெப்பநிலையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, 3 விஞ்ஞானிகளை 6 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை அழைத்துச் செல்லும். இதன் மேல் பகுதி டைட்டானியத்தால் தயாரிக்கப்படுகிறது.
- இது இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆழ்கடலில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற வளங்களை மதிப்பிட இந்த திட்டம் உதவும். அத்துடன் விரிவான கடல் கண்காணிப்பு மற்றும் ஆழ்கடல் சுற்றுலாவுக்கான சாத்தியக் கூறுகள் பற்றி அறியவும் இது உதவும். இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு ‘பர்கவஸ்த்ரா’ குண்டு சோதனை வெற்றி:
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டு ‘பர்கவஸ்த்ரா’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
- சிறிய ரக ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்காக சோலார் டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (எஸ்டிஏஎல்) என்ற உள்நாட்டு நிறுவனம் குறைந்த செலவில் ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டுகளை உருவாக்கியது.
- இது ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த ராக்கெட் குண்டுகள் கோபால்பூரில் 3 முறை பரிசோதனை செய்யப்பட்டது.
- இந்த முன்னணி தொழில்நுட்பம் அதிகளவிலான ட்ரோன் தாக்குதலை முறியடிக்க உதவும்
- ட்ரோன் தாக்குதலை முறியடிக்க பல அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்படும். 20 மீட்டர் சுற்றளவில் 2.5 கி.மீ தூரத்துக்குள் வரும் ட்ரோன்களை பர்கவஸ்த்ரா மூலம் அழிக்க முடியும்.
- இதில் உள்ள சென்சார்கள், ரேடாரில் சிக்காமல் குறைந்த உயரத்தில் பறந்து வரும் ட்ரோன்களை கண்டறியும்.
- மலைப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் இதனை பயன்படுத்த முடியும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டு என்பதால், வான் பாதுகாப்பில் தற்சார்பு நிலையை எட்ட முடியும்.
58-வது ஞானபீட விருது:
- புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (16.05.2025) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராம் பத்ராச்சார்யாவுக்கு 58-வது ஞானபீட விருதினைக் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு வழங்கினார்.
உள்ளடக்கிய இந்தியா உச்சி மாநாடு 2025:
- உலகளாவிய அணுகல் விழிப்புணர்வு தினத்தையொட்டி(Global Accessibility Awareness Day), 2025 மே 15, அன்று புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் உள்ளடக்கிய இந்தியா உச்சி மாநாடு(Inclusive India Summit) நடைபெற்றது. இந்த நிகழ்வு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, எஸ்பிஐ அறக்கட்டளை மற்றும் தில்லியின் தேசிய பார்வையற்றோர் சங்கம் ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்டது.
- இந்த உச்சிமாநாட்டில், சர்வம் AI உடன் இணைந்து தற்போது உருவாக்கப்பட்டு வரும் குரல் மற்றும் வாட்ஸ்அப் அடிப்படையிலான AI-இயக்கப்பட்ட சாட்போட்டின் செயல் விளக்கமும் இடம்பெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் பற்றிய தகவல்களை அணுகுவதை மேம்படுத்துவதற்காக இந்த சாட்போட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த நிகழ்வின் போது, DEPwD பல்வேறு அமைப்புகளுடன் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டது:
- 1.ஐ ஃபார் ஹ்யூமானிட்டி ஃபவுண்டேஷன் - இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், அணுகக்கூடிய கட்டமைக்கப்பட்ட சூழல் மற்றும் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொது கட்டிடங்களில் தணிக்கை மற்றும் இணக்கத்தை சான்றளிப்பதற்கான சரிபார்ப்பு பட்டியல், கருவித்தொகுப்பு மற்றும் 'அணுகல் தன்மை குறியீடு' ஆகியவற்றை உருவாக்குவதும் இதில் அடங்கும்.
- 2.நிப்மேன் அறக்கட்டளை மற்றும் செயலில் உள்ள குடியுரிமைக்கான இளம் தலைவர்கள் (YLAC) - இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த புதுமை மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த கூட்டாண்மையின் கீழ், உள்ளடக்கிய நடைமுறைகளை அங்கீகரிக்க ஹேக்கத்தான்கள், தேசிய போட்டிகள் மற்றும் சம வாய்ப்பு விருதுகள் ஏற்பாடு செய்யப்படும்.
- 3. ராம்ப் மை சிட்டி அறக்கட்டளை - இந்த கூட்டாண்மை சுகாதார மையங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட தடையற்ற பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதை மையமாகக் கொண்டது.
சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிறைவு விழா :
- சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிறைவை இன்று (16.05.2025) கொண்டாடும் அம்மாநில மக்களுக்கு, சிக்கிம் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- இந்த ஆண்டு, சிக்கிம் மாநிலமாக உருவானதன் 50-வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடும் நிலையில், இந்த தினம் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது என அவர் கூறியுள்ளார். சிக்கிம் மாநிலம் அமைதியான அழகான, வளமான கலாச்சார மரபுகளுடன் கடினமாக உழைக்கும் மக்களையும் கொண்ட மாநிலமாக உள்ளது என திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநில உருவாக்க தினம் :
- 1975 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதியன்று சிக்கிம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது.
- 1950 ஆம் ஆண்டில், இந்திய-சிக்கிம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதன் மூலம், சிக்கிம் இந்தியாவினால் பாதுகாக்கப்படும் பகுதியாக மாறியது.
- சிக்கிம் பகுதியை, 1975 ஆம் ஆண்டு வரையில் நம்கியால் வம்சத்தினர் ஆட்சி செய்தனர்.
- 1975 ஆம் ஆண்டில் சிக்கிம் பிரதமர், இந்திய ஒன்றியத்தில் சிக்கிம் மாநிலம் இணைய விரும்புவதாக இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
- இதனையடுத்து ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதில் 97.5% மக்கள் மன்னராட்சியை வழித்து சிக்கிம் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவளித்தனர்.
- 35வது சட்டத் திருத்தமானது. சிக்கிம் மாநிலத்தை 'இணை மாநிலமாக மாற்றியது.
- இந்த அந்தஸ்தினைப் பெற்ற ஒரே மாநிலம் சிக்கிம் மட்டுமே ஆகும்.
- 36வது சட்டத் திருத்தமானது 35வது சட்டத்திருத்தத்தை ரத்து செய்து சிக்கிமை முழு மாநிலமாக மாற்றியது.
போர் வாகன மற்றும் ஆயுத அமைப்பு சோதனை (ஏடபிள்யூடிசி) மையம்:
- சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ) சார்பில், ஆவடி அடுத்த வெள்ளனூரில் புதிதாக போர் வாகன மற்றும் ஆயுத அமைப்பு சோதனை (ஏடபிள்யூடிசி) மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் (17.05.2025) திறந்து வைத்தார்.
- போர் வாகன மற்றும் ஆயுத அமைப்பு சோதனை மையத்தில் 26 வகையான சோதனை தடங்கள் உள்ளன. அவை கவச வாகனங்களின் முழுமையான வாகன செயல்திறனை சோதிக்கும் திறன் வாய்ந்தவையாகும். இந்த செயல்திறன் சோதனைகள், சிவிஆர்டிஇ நிறுவனத்தின் மட்டுமல்லாது வேறு எந்த வடிவமைப்பு நிறுவனத்தாலும் வடிவமைக்கப்பட்ட கவச வாகனங்களையும் சோதனைகளுக்காக வழங்குவதற்கு முன்பு, அவற்றின் நம்பகத் தன்மையை சரிபார்க்க உதவும்.
பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல் உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு:
- பப்புவா நியூ கினியா நாட்டில் போலியோ தொற்று பரவுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
- பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள வேய் எனும் கடலோர நகரத்தில் வழக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, இரண்டும் ஆரோக்கியமான குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மிகவும் கொடிய போரியோ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- கடந்த 2000-ம் ஆண்டு அந்நாட்டில் போலியோ தொற்று முற்றிலும் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது ஆனால், 2013-ம் ஆண்டு அங்கு புதியதாக போலியோ தொற்றுக்கள் பதிவாகின. இருப்பினும், அதே ஆண்டில் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
- நிகழாண்டின் (2005) இறுதிக்குள், 100 சதவிகித குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக பப்புவா நியூ கினியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் இலியாஸ் சுபாவோரே தெரிவித்துள்ளார்.
- இதில் பப்புவா நியூ கினியாவில் வாழும் 10 வயதுக்குப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சுமார் 35 லட்சம் மக்கள் இதன்மூலம் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
- முன்னதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படிவைல்ட் போவியோ வைரஸின் வகை 3 மற்றும் வகை 3 கடந்த 1909 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் முற்றிலும் அழிக்கப்பட்டன.
- 2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், வகை 1 வைரஸ்களினால் பாகிஸ்தான் மற்றம் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகள் மட்டுமே பாதிப்படைந்துள்ளது. குறிப்பிடத்தக்கது.
தோஹா டைமண்ட் லீக்கில் 16வது சீசன் - நீரஜ் சோப்ரா 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து சாதனை:
- கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்றுவருகிறது டைமண்ட் லீக் தடகளத்தின் 16 ஆவது சீசன். இந்த போட்டியில் கிஷோர் ஜெனா,பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
- இவர்களுடன் ஹரியாணாவை சேர்ந்தவரும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவருமான நீரஜ் சோப்ராவும் களம் கண்டார்.
- தோஹா டைமண்ட் லீக்கில் முதல் முயற்சியில் 88.40 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா, தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் 'நோத்ரோ' என்றானதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மூன்றாவது முயற்சியில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார்.
- இந்தவகையில், தனது 18 ஆவது டைமண்ட் போட்டியில், 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ள்ளார். இதன்மூலம், இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 25-வது வீரர் என்ற என்ற பெருமையையும் பெற்றார், நீரஜ் சோப்ரா.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN MAY 2025 IN TAMIL : (15.05.2025-17.05.2025)
சர்வதேச குடும்ப தினம் (International Day of Families ) :
- சர்வதேச சமூகம் குடும்பங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று சர்வதேச குடும்ப தினம் அனுசரிக்கப்படுகிறது.
- டிசம்பர் 9, 1989 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒரு தீர்மானத்தில் சர்வதேச குடும்பங்களின் ஆண்டாக அறிவித்தது.
- 1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மே 15 ஐ சர்வதேச குடும்பங்களின் தினமாக அறிவித்தது.
- கருப்பொருள் 2024 : - காலநிலை மாற்றமும் குடும்பங்களும் (Families and Climate Change)
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!