உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது:
- 'ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது'' என நிடி ஆயோக் தலைவர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
- இது குறித்து நிடி ஆயோக் தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது: உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 5வது இடத்தில் இருந்த இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடானது. இந்தியாவின் பொருளாதாரம் இப்போது 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
- IMF வெளியிட்ட உலக பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின் (World Economic Outlook Report) ஏப்ரல் பதிப்பு, 2026 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தோராயமாக 4,187.017 பில்லியன் டாலர்களைத் தொடலாம் எனக் கூறுகிறது. இது ஜப்பானின் தோராயமாக கணக்கிடப்பட்ட 4,186.431 பில்லியன் டாலர்களை விட சற்று அதிகம்.
- மேலும் IMF அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என கணித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 2025 நிதியாண்டில் 6.2% மற்றும் 2026ல் 6.3% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலான நாடுகளை விட அதிகம்.
- தற்போது ஜெர்மனியின் உள்நாட்டு உற்பத்தி என்பது 4.744 டிரில்லியன் டாலராக உள்ளது.
- நம்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியனை கடந்து 4.187 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
விருதுநகர் மாவட்டத்திற்கு நிதி ஆயோக் விருது :
- முன்னேற விழையும் மாவட்டங்களில் இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முன்னேற்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் (Aspirational District Programme ) விருதுநகர் மாவட்டத்திற்கு இந்திய அரசின் நிதி ஆயோக் மூலம் வழங்கப்பட்ட விருது மற்றும் 3 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.
- ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டம் (Aspirational District Programme) என்பது, 2018 இல் NITI ஆயோக் மூலம் தொடங்கப்பட்ட, நாடு முழுவதும் உள்ள 112 வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சி. இந்தத் திட்டம், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவமான தேவைகள் மற்றும் வலிமைகளை அடிப்படையாகக் கொண்டு, உடனடி முன்னேற்றத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
- இந்தத் திட்டத்தின் கீழ், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம் மற்றும் நீர்வளங்கள், நிதி சேவைகள் மற்றும் திறன் மேம்பாடு, சாலை, குடிநீர் மற்றும் தனிநபர் வீட்டு கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் போன்ற முக்கியத் துறைகளை உள்ளடக்கிய 49 வெவ்வேறு காரணிகளைக் கொண்டு வளர்ச்சி அளவிடப்படுகிறது.
மகப்பேறு விடுப்பு பெண்களின் இனப்பெருக்க உரிமைகளின் முக்கிய பகுதி - உச்ச நீதிமன்றம்:
- இரண்டாவது திருமணத்தில் குழந்தை பிறந்த பின்னர் மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஆசிரியை ஒருவர் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்த முக்கியமான உத்தரவு வழங்கப்பட்டது.
- இரண்டு குழந்தைகளை மட்டுமே கொண்ட பெண்களுக்கு மட்டுமே நன்மைகளை வழங்கும் மாநில கொள்கையின் அடிப்படையில், மூன்றாவது குழந்தை பிறப்பில் ஒரு பெண்ணிற்கு மகப்பேறு விடுப்பு மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.
- தமிழ்நாடு அரசு தனது பெண் ஊழியர்களை மாநில சேவை விதிகள் மற்றும் தேசிய மகப்பேறு நலன் சட்டம், 1961 (2017-ல் திருத்தப்பட்டது) இரண்டின்படியும் மகப்பேறு விடுப்பு வழங்குகிறது.
- பொதுவாக தமிழ்நாட்டின் சேவை விதிகள் இரண்டு உயிருள்ள குழந்தைகளுக்கும் குறைவான பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை மட்டுப்படுத்தியது, இது மக்கள்தொகை கட்டுப்பாட்டு கொள்கையுடன் ஒத்திருந்தது. எனினும், சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மகப்பேறு விடுப்பு மகப்பேறு நன்மைகளின் ஒருங்கிணைந்த பகுதி மற்றும் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளின் முக்கிய கூறு என்று தெளிவுபடுத்தியுள்ளன.
- இரண்டு உயிருள்ள குழந்தைகளுக்கும் குறைவான பெண்களுக்கு 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பையும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு 12 வாரங்களையும் வழங்கும் மகப்பேறு நலன் சட்டத்தால் வழங்கப்படும் பரந்த பாதுகாப்புகளை மாநிலத்தின் இரண்டு குழந்தை நெறிமுறை மீறக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது.
சர்வதேச புக்கர் பரிசு 2025:
- ‘ஹார்ட் லாம்ப்' சிறுகதை தொகுப் புக்காக கன்னட எழுத்தாளர் பானு முஸ்தாக் சர்வதேச அளவில் புகழ்பெற்ற புக்கர் விருதை வென்றுள்ளார். இந்த விருது முதல் முறையாக சிறுகதை தொகுப்புக்காக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- 1990 முதல் 2023-ம் ஆண்டு வரை அவர் கன்னடத்தில் எழுதிய சிறுகதைகள் ‘ஹார்ட் லாம்ப்’ (இதய விளக்கு) என்ற பெயரில் ஆங்கிலத்தில் தொகுப்பாக வெளிவந்தது. இதனை தீபா பஸ்தி ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்திருந்தார். தற்போது இருவருக்கும் சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
- ஹார்ட் லாம்ப் என்ற தனது சிறுகதைத் தொகுப்புக்காக ‘சர்வதேச புக்கர் பரிசு வென்ற கன்னட மொழி எழுத்தாளர்’ என்ற பெருமையை பானு முஷ்டாக் பெற்றுள்ளார். புக்கர் பரிசு வென்ற முதல் சிறுகதை தொகுப்பு இதுவாகும்.
- கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் மற்றும் மொழிபெயர்ப்பாளர் தீபா பாஸ்தி ஆகியோர் சிறுகதைக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றனர். லண்டனின் டேட் மாடர்னில் நடந்த விழாவில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் தலைவராக உள்ள எழுத்தாளர் மேக்ஸ் போர்ட்டர் இந்த விருதை அறிவித்தார். சிறுகதைகளின் தொகுப்புக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த பரிசை வென்ற முதல் இந்திய மொழிபெயர்ப்பாளர் தீபா பாஸ்தி ஆவார். அதேபோல இந்த பரிசு பெறும் ஆறாவது பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் ஆவார்
இந்திய ராணுவத்தால் இயக்கப்படும் முதல் எஃப்எம் வானொலி நிலையம்:
- உத்தரகண்டின் பித்தோராகர் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தால் இயக்கப்படும் முதல் எஃப்எம் வானொலி நிலையம் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.
- இதனை ராணுவத்தின் மத்திய கட்டளையின் பொது அதிகாரி அனிந்தியா சென்குப்தா தொடங்கி வைத்தார். இதுகுறித்து வானொலி நிலையத்தின் மேலாளர் மணீஷ் சிங்கால் கூறுகையில், இந்திய ராணுவத்திற்கும் எல்லைப் பகுதி மக்களுக்கும் இடையே நல்லெண்ணத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.
- ஆபரேஷன் சத்பாவனா'வின் கீழ் இயக்கப்படும் சமூக வானொலி நிலையத்திற்கு 'பஞ்ச்சுல் பல்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 88.4 என்கிற அலைவரிசையில் எஃப்எம் ஒலிபரப்பப்படும். இந்திய ராணுவத்தின் 'பஞ்ச்சுல் படைப்பிரிவின்' ராணுவ பொதுப் பள்ளியில் இருந்து இந்த வானொலி நிலையம் இயக்கப்படுகிறது.
- வானொலி நிலையத்திலிருந்து 12 கிமீ சுற்றளவில் உள்ள மக்களால் வானொலியைக் கேட்க முடியும். உள்ளூர் வரலாறு, கலாசாரம், சமூகம் மற்றும் விவசாயம், தோட்டக்கலை போன்ற எல்லைப் பகுதி மக்களின் தொழில்களில் இதன் நிகழ்ச்சிகள் சிறப்பு கவனம் செலுத்தும்.
நித்தி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழுக் கூட்டம்:
- அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஒரு வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான "டீம் இந்தியா" என்ற தனது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் திரு. நரேந்திர மோடி மே 24, 2025 புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடந்தது.
- நித்தி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
- இந்த ஆண்டுக்கான கருப்பொருள் 'வளர்ந்த பாரதம் @2047க்கு வளர்ந்த மாநிலங்கள்' என்பதாகும். மாநிலங்கள் வாயிலாக இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதன் மீது அதிக கவனம் செலுத்தப்படும். வளர்ந்த பாரதம் @2047க்கு வளர்ந்த மாநிலங்கள் என்ற அணுகுமுறை குறித்து நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
- திட்டக்கமிஷனுக்கு மாற்றாக கடந்த 2015ம் ஆண்டு நிதி ஆயோக் அமைப்பை ஒன்றிய பாஜ அரசு உருவாக்கியது. தேச வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கு, ஈடுபாடு, கூட்டாட்சியை வளர்த்தல், அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ஆண்டுதோறும் கூடுகிறது.
24.5.2025 அன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 10 வது ஆட்சிக்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
- 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு கடந்த நிதியாண்டில் நாட்டிலேயே அதிகமாக 9.69 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது.
- இந்திய விடுதலையின் நூற்றாண்டில் (2047-இல்), 4.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற சவாலை முன் வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு உழைத்து வருகிறது.
- 2047-இல் இந்தியாவின் இலக்கான 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில், தமிழ்நாட்டின் பங்களிப்பு வலுவாக இருக்கும்.
- இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 விழுக்காட்டு பெண் பணியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
- 18 லட்சம் குழந்தைகளுக்குப் பயனளிக்கும் காலை உணவுத் திட்டம், ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், பெண்கள் இதுவரை 694 கோடி இலவசப் பயணங்களை மேற்கொண்டுள்ள விடியல் பயணம் திட்டம், பணிபுரியும் மகளிர் தங்குவதற்கு தோழி விடுதிகள், 40 லட்சம் இளைஞர்களுக்கும் மேலாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கியுள்ள 'நான் முதல்வன்', உயர்கல்வியை ஊக்குவிக்கும் ’தமிழ்ப்புதல்வன்', 'புதுமைப்பெண்' திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
- கடந்த நான்காண்டுகளில் 30 புதிய தொழிற்பூங்காக்கள், தகவல் புரட்சிக்கு அடித்தளமாக 16 புதிய சிறிய டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். 'அம்ருத் 2.0' திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத்தேவையாகும்.
- "சுத்தமான கங்கை" திட்டம் போன்று, தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்க இதேபோன்ற திட்டம் தேவை.
- 'P.M.ஸ்ரீ' திட்டம் தொடர்பான கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது. 2024-2025- ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் ஒன்றிய நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ,இது அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் R.T.E.கீழ் (கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ்) படிக்கும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது. எனவே, தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
- கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் இந்தப் பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.
- சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு ஒப்படைக்க வேண்டும்.
- மேலும், செங்கல்பட்டு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக மாற்றுவது, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆதிதிராவிடா், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதி பட்டியலில் சில சமூகங்களின் பெயர்களில் மாற்றம் (“N” மற்றும் “A” என முடிவடையும் பெயர்களை “R’’ என மாற்றக் கோருதல்), கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடா்களை ஆதிதிராவிடா் பட்டியலில் தொடரவைப்பது, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களையும் அவா்களது படகுகளையும் மீட்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
15-வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் 2025:
- 15-வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் மே 21, 2025 அன்று பிரேசில் தலைமையின் கீழ், "உள்ளடக்கிய, நிலையான நிர்வாகத்திற்கு உலகளாவிய தென் பகுதி நாடுகள் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்" என்ற கருப்பொருளில் நடைபெற்றது.
- பிரிக்ஸ் உறுப்பினர்களிடையே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்துவதற்காக இந்தியா இந்தத் தளத்தைப் பயன்படுத்திக் கொண்டது. 2026-ம் ஆண்டில் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க இந்தியா தயாராகி வரும் நிலையில், முக்கியமான வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிரேசில் தலைமையின் தீர்வு சார்ந்த அணுகுமுறையைப் பாராட்டியது.
கூட்டத்தின் முக்கிய விளைவாக, கீழ்கண்ட மூன்று கூட்டுப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:
- உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம், பலதரப்பு வர்த்தக அமைப்பை வலுப்படுத்துதல் குறித்த பிரிக்ஸ் பிரகடனம்
- பிரிக்ஸ் தரவு பொருளாதார ஆளுகை
- பிரிக்ஸ் வர்த்தகம் மற்றும் நிலையான வளர்ச்சி கட்டமைப்பு
மீன்வள செயலாளர்கள் மாநாடு 2025:
- மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் (MoFAH&D) கீழ் உள்ள மீன்வளத் துறை (DoF), "மீன்வள செயலாளர்கள் மாநாடு 2025" மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தைப் பயன்படுத்துவது குறித்த தேசிய பட்டறை ஆகியவற்றை நடத்தியது.
- பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY), மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (FIDF) ஆகியவற்றின் முன்னேற்றம் மற்றும் பிரதம மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா-யோஜனா (PM-MKSSY) அமலாக்கம் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும் புதுதில்லியில் நடைபெற்றது.
- மீன்வளத்துறை செயலாளர் (மீன்வளம்) டாக்டர் அபிலக்ஷ் லிக்கி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில மீன்வளத் துறைகள், இந்திய ரிசர்வ் வங்கி, வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி, டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பு, சிறு விவசாயிகளின் வேளாண்-வணிக கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் மற்றும் ஐ.சி.ஏ.ஆர் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஒற்றையர் ஆடவர் பிரிவில் தனது 100-வது பட்டத்தை வென்று சாதனை:
- 38 வயதான செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச், ஒற்றையர் ஆடவர் பிரிவில் தனது 100-வது பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ரோஜர் ஃபெடரர் மற்றும் ஜிம்மி கான்னர்ஸ் ஆகியோர் தான் 100+ பட்டங்களை ஒற்றையர் பிரிவில் வென்றுள்ளனர். தற்போது அந்த வரிசையில் ஜோகோவிச் 3-வது வீரராக இணைந்துள்ளார்.
- ஜெனீவாவில் நடைபெற்ற ஜெனீவா ஓபன் இறுதிப் போட்டியில் ஹூபர்ட் ஹர்காக்ஸை 5-7, 7-6(2), 7-6(2) என்ற செட் கணக்கில் வீழ்த்தி, தனது 100-வது பட்டத்தை ஜோகோவிச் வென்றார்.
ஊராட்சிகள் (பஞ்சாயத்து) முன்னேற்றக் குறியீடு / Panchayat Advancement Index (PAI) 2.0 :
- பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஊராட்சிகள் (பஞ்சாயத்து) முன்னேற்ற குறியீட்டின் இரண்டாவது பதிப்பு குறித்த இரண்டு நாள் தேசிய எழுத்துப் பயிலரங்கத்தை மே 26-27 தேதிகளில் புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
- 2023–24 நிதியாண்டிற்கான தேசிய ஊராட்சிகள் முன்னேற்றக் குறியீடு வெளியீடு தொடர்பாக இந்த எழுத்துப் பயிலரங்கம் (Writeshop) நடைபெறுகிறது.
PAI 2.0-ன் நோக்கம்:
- பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மூலம் கிராமப்புறங்களில் முழுமையான, உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்டு கிராம பஞ்சாயத்து நிலையில் தரவு அடிப்படையிலான கண்காணிப்புக்கும் திட்டமிடலுக்குமான திறன்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தொடக்க அமர்வில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் திரு சௌரப் கார்க், கூடுதல் செயலாளர் திரு சுஷில் குமார் லோஹானி; நிதி ஆயோக்கின் மூத்த ஆலோசகர் திரு ராஜீப் குமார் சென், பிற மூத்த அதிகாரிகள், நிபுணர்கள் கலந்து கொள்வார்கள்.
PAI 2.0-ன் கருப்பொருள்:
- உள்ளூர்மயமாக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்த ஒன்பது கருப்பொருள்களில் கிராம பஞ்சாயத்துகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் ஊராட்சிகள் (பஞ்சாயத்து) முன்னேற்ற குறியீடு ஒரு வலுவான, பல பரிமாண கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த கருப்பொருள்கள் வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, நீர் மேலாண்மை, தூய சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, நிர்வாகம், சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.
PAI 2.0 இல் உள்ள முக்கிய மேம்பாடுகள் பின்வருமாறு:
- PAI 1.0 இலிருந்து 516 குறிகாட்டிகளின் எண்ணிக்கையை PAI 2.0 இல் 147 ஆக குறைத்து பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் அறிக்கையிடல் சுமையை குறைத்தல்;
- பகுத்தறிவு படுத்தப்பட்ட தரவு புள்ளிகள் மற்றும் கருப்பொருள்கள், அளவை விட தரத்தில் கவனம் செலுத்துதல்;
- மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தேசிய வலைப்பதிவுகளிலிருந்து தரவின் தானியங்கி ஒருங்கிணைப்பு;
- மேம்படுத்தப்பட்ட டேஷ்போர்டுகள் (dashboards) மற்றும் பயனர் அணுகல் தன்மையுடன் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் மொபைல் (mobile) நட்பு வலைப்பதிவு இடைமுகம்;
- துல்லியமான தரவு நுழைவு மற்றும் கண்காணிப்பை உறுதிசெய்வதற்கான உள்ளமைக்கப்பட்ட சரிபார்ப்பு மற்றும் முரண்பாடு கண்டறிதல் வழிமுறைகள்;
- பஞ்சாயத்துகள் வளர்ச்சி இடைவெளிகளை அடையாளம் காணவும் வளம் ஒதுக்கீட்டிற்கு முன்னுரிமை அளிக்கவும் உதவும் முடிவு ஆதரவு அமைப்பு (Decision Support System).
நாட்டின் முதல் மாநிலமாக 100 சதவீதம் எழுத்தறிவு பெற்று மிசோரம் சாதனை :
- இந்தியாவில் முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற சாதனையை மிசோரம் படைத்துள்ளது.இதனை மிசோரம் மாநில முதல்-மந்திரி லால்டுஹோமா அறிவித்தார். மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய கல்வித் துறை இணை மந்திரி ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில், அம்மாநில முதல்-மந்திரி இதனை தெரிவித்தார்.
- கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மிசோரம் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33 சதவீதமாக இருந்தது. இப்போது மிசோரம் மாநிலம் நாட்டிலேயே அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மூன்றாவது மாநிலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சூரிய உதய விழா:
- அருணாச்சலப் பிரதேச அரசு 2026 ஜனவரி 1ம் தேதியன்று இந்தியா-சீனா-மியானமர் எல்லைக்கு அருகில் உள்ள டோங் கிராமத்தில் சூரிய உதய விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.
- இந்த விழாவின் பின்னணியில், கிழக்கு எல்லைக்கு அருகில் தனது இருப்பை உறுதிப்படுத்தும் இந்தியாவின் முயற்சியின் ஒரு பகுதியாக மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
- அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை தனது பகுதி என்று கூறிவரும் சீனாவுக்கு இந்தியாவின் அமைதியான பதிலடியாக இது கருதப்படுகிறது.
- எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு இமயமலையின் பின்னணியில் அமைக்கப்பட்ட சூரிய உதய விழா 2025 டிசம்பர் 29ம் தேதி முதல் 2026 ஜனவரி 3ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோல்டன் டோம் என்ற புதிய வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு:
- ”கோல்டன் டோம்" என்ற புதிய வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மே 20, 2025 அன்றுஅறிவித்தார்.
- இது அமெரிக்காவை பாலிஸ்டிக், கிரூஸ், ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மற்றும் விண்வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு பெரிய திட்டமாகும். இஸ்ரேலின் "அயர்ன் டோம்" அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த அமைப்பு நிலம், கடல், விண்வெளியை உள்ளடக்கிய பல அடுக்கு பாதுகாப்பு கேடயத்தை உருவாக்கும். ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, எதிரி ஏவுகணைகளை விரைவாகக் கண்டறிந்து, கண்காணித்து, அவை ஏவப்பட்ட சில நிமிடங்களில் அழிக்கும்.
15வது தாதாசாகேப் பால்கே திரைப் பட விருது விழாவில் (2025) சிறந்த ஆவணப்படத்திற்கான விருது :
- 15வது தாதாசாகேப் பால்கே திரைப் பட விருது விழாவில் (2025) சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை "Saving the Bhimanama: Ayushi Jain and a Giant Turtle" என்ற ஆவணப்படம் வென்றுள்ளது.
- இது பஹர் தத் மற்றும் விஜய் பேடி ஆகியோரால் இயக்கப்பட்ட ஆவணப்படமாகும்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!