51வது ஜி7 உச்சி மாநாடு 2025:
- ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.
- ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஜூன் 15 முதல் 17-ம் தேதி வரை கனடாவின் கனனாஸ்கிஸ் பகுதியில் நடைபெற உள்ளது.
- மாநாட்டில் பங்கேற்க பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு கனடா அரசு சார்பில் அழைக்கப்பட்டது.
ஜி7 நாடுகள் :
- முன்னேறிய நாடுகள் எனக்கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பாகும். இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது.
- முதன்முதலில் 1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன.
- அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது. அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆனது.
- ஜி7 மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்களோடு, (சிறப்பு அழைப்பாளர்கள்) ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரும் கலந்து கொள்வார்கள். பொதுவாக மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.
இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது:
- இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்லியனாக குறைந்தது. 2011 - 12 ஆம் ஆண்டில் 27.1 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து, 2022 - 23 ஆம் ஆண்டில் 5.3 சதவிகிதமாகக் குறைந்தது.
- சுமார் 11 ஆண்டுகளில் 269 மில்லியன் மக்கள் கடும் வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
- கடந்த 11 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் கடும் வறுமை 18.4 சதவிகிதத்திலிருந்து 2.8 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் கடும் வறுமை 10.7 சதவிகிதத்திலிருந்து 1.1 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.
- உலக வங்கியின் கணக்கெடுப்பின்படி, தினசரி நுகர்வானது மூன்று டாலருக்கும் குறைவாக இருப்பதை வறுமைக் கோட்டுக்குக்கீழ் (2021 ஆம் ஆண்டில்) வகைப்படுத்தியது.
அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்:
- டி கிராசே’ என்ற அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
- பிரான்ஸ் கடற்படையில் ஏற்கெனவே உள்ள ரூபிஸ் வகை நீர்மூழ்கி கப்பல்களை 2030-ம் ஆண்டுக்குள் மாற்றும் வகையில் 10 பில்லியன் யூரோ மதிப்பில் ‘பராகுடா’ என்ற திட்டத்தின் கீழ் இந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
- எதிரி படையால் கண்டுபிடிக்க முடியாதபடி மிக நவீன தொழில்நுட்பத்துடன் பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ள ‘டி கிராசே’ என்ற இந்த நீர்மூழ்கி கப்பலில் 1000 கி.மீ தூரம் சென்று தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள், எப் 21 டார்பிடோக்கள் இதில் உள்ளன. எதிர்கால போர் முறைகளுக்கு ஏற்ற வகையில், எதிரி படைகளிடம் சிக்காத வகையில், அதி நவீன தொழில்நுட்பங்களுடன் ‘டி கிரோசே’ வெளிவந்துள்ளது.
- 4,700 டன் முதல் 5,200 டன் வரை எடையுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் 324 அடி நீளம் உள்ளது. ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் அணு மின் சக்தி, மற்றும் நீர் மின்சக்தி ஆகியவற்றில் செயல்படும். எனவே, இது ஆண்டுக்கு 270 நாட்கள் இது ரோந்து செல்லும் திறன் படைத்தது. இந்த நீர்மூழ்கி கப்பல் காரணமாக பிரான்ஸ் கடற்படை மட்டும் இன்றி நேட்டோ படையும் வலுப்பெறும்.
சோலார் திறன் மேம்பாட்டு மையம்: தமிழ்நாடு அரசு - டாடா பவர் ஒப்பந்தம்:
- தமிழக ஐடிஐ-க்களில் மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் சோலார் திறன் மேம்பாட்டு மையங்களை அமைப்பதற்கான திட்டத்தில் டாடா பவர் நிறுவனமும் தமிழ்நாடு அரசும் கையெழுத்திட்டுள்ளன.
- மாநிலத்தில் பசுமை எரிசக்தி துறையில் மாணவர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, மாநிலத்தில் உள்ள ஐடிஐ.க்களில் சோலார் திறன் மேம்பாட்டு மையங்களை அமைப்பதற்காக டாடா பவர் அதன் திறன் மேம்பாட்டு பிரிவான டிபிஎஸ்டிஐ மூலம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்துடன் (டிஇடி) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இதன்படி, முதல்கட்டமாக 4 சோலார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் திருநெல்வேலி பேட்டை, தூத்துக்குடி, சாத்தூர் மற்றும் விருதுநகரில் உள்ள அரசு ஐடிஐ-க்களில் அமைக்கப்பட உள்ளன. இந்த முயற்சியின் மூலம் சூரிய ஆற்றலிலும், காற்றாலை மற்றும் பசுமை ஹைட்ரஜன் தொடர்புடைய துறைகளிலும் ஐடிஐ மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி கிடைக்கும்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது:
- இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டிகள் பார்டர் - கவாஸ்கர் டிராபி என அழைக்கப்படுகின்றன. அதேபோல், இந்தியா- இங்கிலாந்து அணிக்கும் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இதற்கு முன்பாக இரு அணிகளுக்காமன டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்தில் விளையாடும்போது பட்டோடி டிராபி என்றும் இந்தியாவில் விளையாடும்போது அந்தோனி டீ மெல்லோ டிராபி என்றும் அழைக்கப்பட்டு வந்தன.
- இந்நிலையில், இரு நாட்டு அணிகளின் ஜாம்பவான்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், சச்சின் டெண்டுல்கரை கௌரவிக்கும் ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ வலைதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது:
- மத்திய அரசு சமீபத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து வக்பு சொத்துகளை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுவதற்காக புதிய இணையதளம் உமீத் (The UMEED Central Portal)அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
- இதைத் தொடர்ந்து இணையதளம் தொடங்குவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார்.
- இந்தியாவின் வக்ஃப் சொத்து நிர்வாக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக உமீத் மைய போர்ட்டல் (06 ஜூன் 2025)தொடங்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது மட்டுமின்றி சாமானிய முஸ்லீம்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என்று மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
- புதுதில்லியில் உமீத் மைய போர்ட்டலை இன்று தொடங்கிவைத்த அவர், இந்தப் போர்ட்டல் தொழில்நுட்ப மேன்மைப்படுத்தலைவிட கூடுதல் சிறப்பு உடையது என்றார். சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு இது ஓர் அடையாளம் என்று குறிப்பிட்ட திரு கிரண் ரிஜிஜூ, அந்த சமூகத்திற்கு சொந்தமான வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லீம்களுக்கு பயனுள்ள வகையிலும், நியாயமாகவும் பயன்படுத்தப்படுவதை இது உறுதி செய்யும் என்றார்.
உமீத் போர்ட்டலின் முக்கிய அம்சங்கள்:
- அனைத்து வக்ஃப் சொத்துக்களிலும் புவிசார் குறிச்சொற்களை இணைத்து டிஜிட்டல் சரக்கு பட்டியலை உருவாக்குதல்.
- சிறந்த பதிலளிப்புக்கான ஆன்லைன் குறை தீர்க்கும் அமைப்பு
- வெளிப்படையான குத்தகை மற்றும் பயன்பாட்டு கண்காணிப்பு
- GIS மேப்பிங் மற்றும் பிற மின்-ஆளுமை கருவிகளுடன் ஒருங்கிணைப்பு.
- சரிபார்க்கப்பட்ட பதிவுகள் மற்றும் அறிக்கைகளுக்கான பொது அணுகல்
இரங்கல்:
- கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி எட்டியன் எமிலி பவுலியூ (98) காலமானார்.
- கருக்கலைப்புக்கான ஆர்.யு.-486 என்ற மருந்தை 1982ம் ஆண்டு விஞ்ஞானி எமிலி பவுலியூ கண்டுபிடித்தார்.
இரங்கல்:
- ஆப்பிள் நிறுவனத்தின் கணினி வடிவமைப்பாளரான பில் அட்கின்சன் காலமானார்.
- வாஷிங்டன்னில் பிறந்தவர் பில் அட்கின்சன். கணினி அறிவியல் மற்றும் நியூரோ பயாலஜியில் பட்டம் பெற்றுள்ளார். ஆப்பிள் நிறுவன கணினியின் வடிவமைப்பாளராக ‘குயிக் டிரா’ என்ற மென்பொருளை வடிவமைத்தவர்.
- லிசா மற்றும் மேகிண்டோஷ் கணினிகளில் இது அடிப்படை மென்பொருளாக பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயனர்களுக்கு கிராஃபிகல் (Graphical) பயனர் அனுபவத்தை வழங்கியது.
- இதோடு ‘புல் டவுன்’ மெனுக்கள், ஃபைல்களை ஓபன் செய்ய ‘டபுள் கிளிக்’ அம்சம் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்ததும் இவர் தான்.
- ‘மேக் பெயிண்ட்’ என்ற மென்பொருளையும் வடிவமைத்தவர்.
நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி 2025 :
- நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் தனது இறுதிச் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவிடம் தோல்வியை தழுவினார். இதனால் இந்தத் தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்பை குகேஷ் இழந்தார்.
- மறுபக்கம் தனது இறுதிச் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியை மேக்னஸ் கார்ல்சன் எதிர்கொண்டார். அதில் கார்ல்சன் வெற்றி பெற்று நார்வே கிளாசிக்கல் செஸ் தொடரில் 7-வது முறையாக பட்டம் வென்றார். 14.5 புள்ளிகளுடன் குகேஷ் மூன்றாம் இடம் பிடித்தார்
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் 2025:
- பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் வீராங்கனை கோகோ காஃப் (coco gauff) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- பாரிஸ் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவும் aryna Sabalenka 2ம் நிலையில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்பும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் செட்டை டை-பிரேக்கரில் tie breaker 7க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் சபலென்கா கைப்பற்றினார்
- அடுத்த செட்டில் comeback கொடுத்த கோகோ காஃப், அதிரடியாக விளையாடி 6க்கு 2 என்ற கணக்கில் 2வது செட்டை வென்றார்
- இருவரும் தலா ஒரு செட்டை வென்றதால் ஆட்டம் சூடுபிடித்த நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் கோகோ காஃப் கைப்பற்றி சபலென்காவை சாய்த்தார
- இதன்மூலம், முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 21 வயதே நிரம்பிய கோகோ காஃப் முத்தமிட்டார்.
தைவான் தடகளப் போட்டிகள் 2025:
- இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆதிக்கத்தால் தைபேயில் (ஜூன் 7) தொடங்கிய ’தைவான் தடகளப் போட்டிகள் 2025-இல்’ இந்தியா இதுவரை, அதாவது இன்று ஒரே நாளில் 6 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
- தைவான் தடகளப் போட்டிகளில் ஒலிம்பிக் நாயகி ஜோதி யாராஜி பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார். அவர் பந்தய தூரத்தை 12.99 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
- பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தை 56:53 விநாடிகளில் கடந்து தங்கம் வென்று அசத்தினார்.
- ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் யாஷஸ் பலக்ஷா இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
- பெண்களுக்கான 800 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பூஜா தங்கமும், ட்விங்கிள் சௌதரி வெள்ளியும் வென்றனர். தங்கம் வென்ற பூஜா ஏற்கெனவே 1500 மீட்டர் பந்தயத்திலும் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பூஜா வரலாற்று சாதனையாக பந்தய தூரத்தை 4:11.65 நிமிட நேரத்தில் கடந்து இந்தியாவின் தங்க வேட்டையை ஆரம்பித்து வைத்தார்.
- ஆடவருக்கான 800 மீட்டர் தடை தாண்டுதலில் கிருஷ்ணன் குமார் தங்கம் வென்றார்.
- பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் வெள்ளி வென்றார்.
- ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ரோஹித் யாதவ் தங்கம் வென்றார்.
- பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அன்னு ராணி தங்கம் வென்றார்.
- பெண்களுக்கன 100 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் சுதீக்ஷா வத்லூரி, அபிநயா ராஜராஜன், சிநேகா எஸ் எஸ், நித்யா காந்தே ஆகியோர் இணைந்த அணி தங்கம் வென்றது.
- ஆடவருக்கான 100 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் குரீந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜுர், மணிகண்டா ஹாப்லிதார், ஆம்லான் போர்கோஹெய்ன் ஆகியோர் இணைந்த அணி தங்கம் வென்றது.
- ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் முன்னாள் ஆசிய சாம்பியன் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்றார்.
- ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தேஜஸ் ஷிர்சே தங்கம் வென்றார்.
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!