CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2025 (18.06.2025-19.06.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2025 (18.06.2025-19.06.2025)



பள்ளிக் கல்வி செயல்திறன் தரக் குறியீடு 2023-24 :

  • 2023-24-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி செயல்திறன் தரக் குறியீட்டில் (Performance Grading Index (PGI) ) சண்டீகா், பஞ்சாப், தில்லி, குஜராத் மற்றும் ஒடிஸா ஆகியவை சிறந்த செயல்திறனுடன் முன்னிலை வகிக்கின்றன.
  • மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாட்டை மதிப்பிடும் செயல்திறன் தரக் குறியீடு (பிஜிஐ-டி) மத்திய கல்வி அமைச்சகத்தால் கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டுமுதல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளுக்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் தரக் குறியீடு  வெளியிடப்பட்டது.
  • பயனுள்ள வகுப்பறை செயல்பாடுகள், உள்கட்டமைப்பு வசதிகள், மாணவா் உரிமைகள், பள்ளி மற்றும் குழந்தை பாதுகாப்பு, எண்மக் கற்றல் மற்றும் நிா்வாக செயல்முறை, விளைவுகள் ஆகிய 6 பிரிவுகளின் கீழுள்ள 74 அளவுருக்களின் அடிப்படையில் இந்த தரக் குறியீடு நிா்ணயிக்கப்படுகிறது.
  • அதன்படி, 2023-24-ஆம் ஆண்டு தரக் குறியீட்டில் 1,000-க்கு 703 புள்ளிகளுடன் சண்டீகா் முதலிடத்தில் உள்ளது. சண்டீகரை தொடா்ந்து பஞ்சாப் (631.2), தில்லி (623.7), குஜராத் (614.4) ஒடிஸா (595.6), கேரளம் (594.2), டாமன்-டையூ (592.2), ஹரியாணா (591.4), கோவா (589.7), மகாராஷ்டிரம் (582.0), ராஜஸ்தான் (581.5) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • புதுச்சேரி, ஹிமாசல பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகள், ஆந்திரம், தமிழ்நாடு, கா்நாடகம், லட்சத்தீவுகள், மேற்கு வங்கம் ஆகியவை குறியீட்டின்படி சராசரி செயல்திறன் கொண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களாக உள்ளன. கூடுதலாக, மத்திய பிரதேசம், சிக்கிம், உத்தர பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்ட், லடாக் ஆகியவையும் இந்தப் பிரிவில் உள்ளன.
  • தெலங்கானா, அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், திரிபுரா, மணிப்பூா், சத்தீஸ்கா், பிகாா், நாகாலாந்து, மிஸோரம், அருணாசல பிரதேசம் ஆகியவை குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களாகவும், மேகலாயம் 417.9 புள்ளிகளுடன் மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2022-23-ஆம் ஆண்டு குறியீட்டின் 563.7 புள்ளிகளில் இருந்து சமீபத்திய குறியீட்டில் 559.2 புள்ளிகளுக்கு தமிழ்நாடு சரிந்துள்ளது என அந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்கது. சமீபத்திய குறியீட்டில் தமிழ்நாடு 16-ஆவது இடத்தில் உள்ளது.


இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்ட ஒப்பந்தம்:

  • இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான நேஷனல் ஹை ஸ்பீட் ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.4,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை சீமென்ஸ் வென்றதாக தெரிவித்தது.
  • மேம்பட்ட சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் வடிவமைப்பு, நிறுவல் மற்றும் நீண்டகால பராமரிப்புக்காக ரூ.1,230 கோடி செலவில் சீமென்ஸ் தனது பங்களிக்கும் என்றது.
  • தினேஷ்சந்திர ஆர் அகர்வால் தலைமையில், இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட், சீமென்ஸ் லிமிடெட் மற்றும் சீமென்ஸ் மொபிலிட்டி ஜிஎம்பிஹெச் தலைமையிலான கூட்டமைப்புக்கு நேஷனல் ஹை ஸ்பீட் ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், முக்கிய ஒப்பந்தத்தை வழங்கியதாகவும், இந்த ஆர்டர் சுமார் ரூ.4,100 கோடி மதிப்புடையதாகும்.
  • ஒப்பந்தத்தின் கீழ், சீமென்ஸ் ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, நிலை-2 அடிப்படையிலான சிக்னலிங் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை செயல்படுத்தும். ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, நிலை-2 என்பது உலகளவில் நிரூபிக்கப்பட்ட சிக்னலிங் தொழில்நுட்பமாகும். இது 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. 


புரிந்துணர்வு ஒப்பந்தம்:

  • தமிழ்நாடு வேளாண் வணிகம் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஏற்றுமதி கழகத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் அதுல் ஆனந்த், சென்னை ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, சென்னை ஐஐடி மேலாண்மை படிப்புகள் துறைசார் பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
  • இதன்மூலம், புத்தாக்கத்துடன் உலகளாவிய போட்டியை சமாளிக்கும் விதத்தில் தமிழ்நாட்டின் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளை மேலும் ஊக்கப்படுத்த வழிவகை செய்யப்பட உள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இதன் முக்கிய அம்சங்களாக:

  • வேளாண் வணிகம் குறித்து ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்த்தல்
  • பயிர் விளைச்சலில் நஷ்டம் ஏற்படுவதை தவிர்த்தல், விநியோகச் சங்கிலியை ஒழுங்குமுறைப்படுத்துதல்
  • சந்தை அணுகுமுறைகளை மேம்படுத்துதல். அதேபோல, ஏற்றுமதி திறனையும் மேம்படுத்துதல்
  • வேளாண் பொருள்களை விளம்பரப்படுத்துதல், அவற்றின் பேக்கேஜ் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல செயல்முறைகள் கடைப்பிடிக்கப்படும்.
  • இவற்றை இலக்காகக் கொண்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐஎன்எஸ் அர்னாலா போர்க்கப்பல் :

  • எதிரிநாட்டு நீர் மூழ்கி கப்பல்களை அழிக்கும் ஐஎன்எஸ் அர்னாலா போர்க்கப்பல் கடற்படையில்  இணைக்கப்பட்டது.
  • எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், கடல் கண்ணி வெடிகளை போடுவதற்கும், குறைந்த ஆழமுள்ள கடலோர பகுதிகளிலும் செல்லும் வகையிலான போர்க் கப்பல் ஒன்றை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) தயாரித்து கடற்படையிடும் கடந்த மே மாதம் 8-ம் தேதி ஒப்படைத்தது.
  •  இந்த போர்க்கப்பலுக்கு மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் அர்னாலா என்ற வரலாற்று சிறப்புமிக்க கோட்டையின் பெயர் வைக்கப்பட்டது. 77 மீட்டர் நீளமுள்ள இந்த போர்க்கப்பல், இந்திய கடற்படையில் டீசல் இன்ஜின் - வாட்டர் ஜெட்-ல் இயங்கும் மிகப் பெரிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.


மாணவா்களின் பள்ளி இடைநிற்றல் பிஏபி அறிக்கை :

  • அண்மையில் நடைபெற்ற மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய (பிஏபி) கூட்டத்தில், சுமாா் 12 மாநிலங்களில் மாணவா்களின் பள்ளி இடைநிற்றல் அதிகரித்து வருவது தெரியவந்தது.
  • பிஏபி அறிக்கையின்படி, 2023-24-ஆம் ஆண்டில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் தொடா்ந்து கவலைக்குரிய வகையில் அதிகரித்துள்ளது தெரியவந்தது.
  • குறிப்பாக, கா்நாடகத்தில் இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் 22.1 சதவீதமாகவும், மேற்கு வங்கத்தில் 17.87 சதவீதமாகவும் இருந்தது. இது தேசிய சராசரியான 14.1 சதவீதத்தைவிட கூடுதலாகும். தமிழகத்தில் இந்த இடைநிற்றல் 7.7 சதவீதமாக இருந்தது. மேலும், உயா்நிலைப் பள்ளி அளவில் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை விகிதத்தை 82.9 சதவீதத்திலிருந்து, 100 சதவீதமாக தமிழகம் உயா்த்த வேண்டியுள்ளது.
  • அதுபோல, பிகாா், ஆந்திரம், ஹரியாணா, ஜாா்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் உயா்நிலைப் பள்ளி அளவில் மாணவா் இடைநிற்றல் அதிகரித்திருப்பது தெரியவந்தது.


ட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி(ஏடிஎம்):

  • சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி(ஏடிஎம்) இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
  • சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.6.04 கோடியில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன


ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது:

  • இந்த தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 6 ஆண்டுகளில் முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார்.
  • தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் 19 புள்ளிகளை இழந்து மூன்றாமிடத்துக்கு சறுக்கினார். 727 ரேட்டிங் புள்ளிகளுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடத்திலும், தலா 719 ரேட்டிங் புள்ளிகள் பெற்று இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களிலும் உள்ளனர்.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-18th-19th-june-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)