CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2025 (22.06.2025-23.06.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2025 (22.06.2025-23.06.2025)


கங்கை நீர் ஒப்பந்தம் குறித்து இந்தியா-வங்கதேசம் பேச்சுவார்த்தை :

  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்ட பிறகு, அடுத்த ஆண்டு காலாவதியாகவுள்ள வங்கதேசத்துடனான கங்கை நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது.
  • இந்தியா தனது வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக நீர் தேவை என்று தனது எதிர்த் தரப்பினரிடம் தெரிவித்துள்ளது. புதிய ஒப்பந்தம் குறுகியதாகவும், 10 முதல் 15 ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த குறுகிய கால அளவு, இரு நாடுகளும் முன்னோக்கிச் செல்ல நெகிழ்வுத்தன்மையையும் தகவமைப்புத் தன்மையையும் வளர்க்கும்.
  • கங்கை நதி நீர் ஒப்பந்தம் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே கங்கை நதி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒரு ஒப்பந்தமாகும். இது டிசம்பர் 12 ,1996 ஆம் ஆண்டில் கையெழுத்தானது, மேலும் 2026 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த ஒப்பந்தம், கங்கை நதியின் நீரை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்வதற்கான விதிமுறைகளை குறிப்பிடுகிறது, குறிப்பாக வறட்சி காலங்களில் வங்காளதேசத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்கிறது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் கூட்டு நதி ஆணையம் 1972 இல் நிறுவப்பட்டது. 

சர்வதேச வான் மற்றும் விண்வெளி பயிற்சியை’ நிறைவு செய்துள்ள இந்தியாவைச் சேர்ந்த முதல் நபர் :

  • ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான பொறியியல் பட்டதாரி ’ஜானவி தங்கேட்டி’ அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘டைட்டான் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்(டிஎஸ்ஐ) மேற்கொண்டுவரும் விண்வெளி திட்டத்துக்கு தேர்வாகியுள்ளார்
  • மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு பொறியியல் படிப்பில் இளநிலை பட்டம் பெற்றுள்ள அவர், உரிய பயிற்சிக்குப் பின் 2029-ஆம் ஆண்டு விண்வெளிக்கு செல்வார் என்று திட்டமிடப்பட்டுள்ளது. 
  • மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலகொல்லு பகுதியைச் சேர்ந்த ஜானவி, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ’சர்வதேச வான் மற்றும் விண்வெளி பயிற்சியை’ நிறைவு செய்துள்ள இந்தியாவைச் சேர்ந்த முதல் நபர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். 
  • நாசா விண்வெளி செயலி போட்டியில்(நாசா ஸ்பேஸ் ஆப்ஸ் சேலஞ்ச்) மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் விருதுக்கான பிரிவில் ஜானவி வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
  • நாசாவின் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அழைத்துச் செல்லும் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தில் ஒருவராக தேர்வாகியுள்ள இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா வெகு விரைவில் விண்வெளி செல்லவுள்ளார். இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த இன்னொரு நபரும் அடுத்தக்கட்டமாக விண்வெளிக்குச் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்:

  • ஈரான் அணு ஆயுத உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன் அறிவித்திருந்தது. 
  • இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பத்து நாள்களுக்கும் மேல் நீடித்துவரும் நிலையில், இதில் அமெரிக்காவும் தலையிட்டிருப்பது நிலைமையை தீவிரமடையச் செய்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் பலத்த தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவும் நேரடியாக 22.06.2025 ஈரானில் தாக்குதலை தொடங்கியது. 
  • அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமாக ஜிபியு-57 ஏ/பி என்றழைக்கப்படும் போர் விமானங்கள் மூலம் பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. 
  • உலகிலேயே அணு ஆயுதமற்ற, மிக சக்திவாய்ந்த குண்டுகளாகக் கருதப்படுகின்றன இவை.
  • “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” நடவடிக்கைகளில் முதல்கட்டமாக ஈரானில் ஃபார்டவ், நடன்ஸ், இஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளவாடங்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி 2025:

  • பாரிஸ் நகரில் நடைபெற்ற 2025 டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்த நீரஜ், இறுதி சுற்றில் 82.89 மீட்டர் தூரம் எரிந்து முதலிடத்தை பிடித்தார். 
  • ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இரண்டாவது இடத்தை பிடித்தார். 
  • கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையான 90.23 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்திருந்தார். மேலும் 90 மீட்டர் தூரத்தைத் தாண்டிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் பெற்றார்.




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-22nd-23rd-june-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)