முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்:
- முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகிக்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் (ஆகஸ்ட்12-ம் தேதி) தொடங்கிவைத்தார்.
- தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமூக நல திட்டங்களால், எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்தவகையில், மாநிலத்தில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு ஒரு புதிய திட்டத்தை 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்துள்ளது.
- அந்த திட்டத்தின் பெயர் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (CM Thayumanavar Thittam). தமிழக முதல்வரின் கனவு திட்டமாகவும் தாயுமானவர் திட்டம் விளங்குகிறது.
- ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பிப்ரவரி 19, 2024 அன்று முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு முதல்வரின் கனவு திட்டமான தாயுமானவர் திட்டத்தின் கீழ் சுமார் ஐந்து லட்சம் ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
- அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஏறக்குறைய ஐந்து லட்சம் ஏழை மற்றும் விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசின் திட்டங்களின் மூலம் செய்துக் கொடுத்து, சமூகம் மற்றும் வாழ்வாதாரத்தை மேன்மை அடைய செய்வதே முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் முழு நோக்கம் ஆகும்.
- இந்த திட்டத்தின் கீழ், தனியாக வசிக்கும் முதியவர்கள், ஆதரவற்றோர், பெற்றோரை இழந்தை குழந்தைகள், ஒற்றைப் பெற்றோரை குடும்பங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் போன்ற வறிய நிலையில் வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
- அதுமட்டுமல்லாமல், இந்த திட்டத்தின் கீழ் ஏறக்குறைய ஐந்து லட்ச ஏழை, எளிய குடும்பங்கள் பயனடைவார்கள். மேலும், இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக உதவித்தொகை டெபாசிட் செய்யப்படும்.
- அதேபோல், இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரை மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இது பள்ளி பயிலும் குழந்தைகளுக்கு இடைநிற்றல் இன்றி பள்ளிப் படிப்பை தொடர மிகவும் உதவியாக இருக்கும். இந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரி கல்வி செல்ல உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும்.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்திற்கான தகுதி வரம்புகள்:
தாயுமானவர் திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற சில தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- ஆதரவற்றோர்
- தனித்து வாழும் வயதானவர்கள்
- மாற்றுத்திறனாளிகள்
- பெற்றோர் இல்லாத குழந்தைகள்
- ஒற்றை பெற்றோரைக் கொண்ட குடும்பங்கள்
- மனநலம் குன்றியவர்கள்
- சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள்
தமிழ்நாடு முதல்வர் தாயுமானவர் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
- இந்த திட்டத்திற்கு என்று பிரத்யேகமாக இணையதளம் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை.
- இருப்பினும், இந்த திட்டத்திற்கான பயனாளிகள் கணக்கெடுப்பின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவர். அதாவது ஏழை மக்கள் அதிகமாக வசிக்கக் கூடிய வசிப்பிடங்களை கண்டறிந்து அவர்களின் குடும்பங்களை வரிசைப்படுத்தி, அதன் மூலமே பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்
CM Thayumanavar Thittam -Key Points :
- திட்டத்தின் பெயர்: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
- திட்டத்தின் வகை: தமிழ்நாடு அரசு திட்டம்
- திட்டம் அறிவிக்கப்பட்ட தேதி: பிப்ரவரி 19, 2024
- செயல்படுத்தும் துறை: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை
- அதிகாரப்பூர்வ இணையதளம்: இன்னும் தொடங்கப்படவில்லை
- திட்ட பலன்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது
Source https://tamil.samayam.com/government-schemes/tamil-nadu-chief-ministers-thayumanavar-thittam