சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை -புதிய திட்டம் (Singappen Special Task Force)
By -TNPSC PAYILAGAM
May 12, 2026
0
முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை'
புதிய அதிரடிப்படை: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' என்ற புதிய திட்டத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்வரின் முதல் கையெழுத்து: தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட விஜய் கையெழுத்திட்ட 3 முக்கிய அரசாணைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அதிரடிப்படை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும்.
முக்கிய நோக்கங்கள்: குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து கண்காணிப்பது, பொது இடங்களில் சுற்றுக் காவல் (Patrolling) பணிகளை மேற்கொண்டு குற்றங்களைத் தடுப்பது மற்றும் பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
கண்காணிப்புப் பகுதிகள்: பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் இப்படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டு சட்டவிரோதச் செயல்கள் தடுக்கப்படும்.
துரித நடவடிக்கை: புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும் ஆதரவையும் உரிய நேரத்தில் வழங்குவார்கள். மேலும் சமூக நலத்துறை மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
படையின் கட்டமைப்பு: இப்படையின் தலைமையகம் டிஜிபி அலுவலகத்தில் இயங்கும். ஒரு ஐஜி அந்தஸ்திலான அதிகாரியின் தலைமையில், 1 எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 4 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 போலீஸார் என மொத்தம் 36 பேரை உள்ளடக்கி இந்தப் படை அதிநவீன வசதிகளுடன் செயல்படும்.