தாரா பாரதி / THARA BHARATHI TNPSC TAMIL NOTES

TNPSC PAYILAGAM
By -
0
THARA BHARATHI TNPSC TAMIL NOTES

(TNPSC TAMIL NEW SYLLABUS STUDY NOTES [ UPDATED ON 2025 ]
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்)

தாரா பாரதி


தாராபாரதி ஆசிரியர் குறிப்பு: 

  • தாராபாரதி இயற்பெயர் : இராதாகிருஷ்ணன். 
  • சிறப்பு பெயர்கள் : கவிஞாயிறு
  • நூல்கள்: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள், தாராபாரதி கவிதைகள் முதலானவை தாராபாரதி இயற்றிய நூல்களாகும்.
  • வாழ்ந்த காலம் - 26.02.1947முதல் 13.05.2000வரை

சிறப்புகள்:

  • கவிஞர் தாராபாரதி எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர். 
  • ஆசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். 
  • கண்ணதாசன் நினைவு விருது பெற்றவர். 

தாராபாரதி எழுதிய நூல்கள் :

  • புதிய விடியல்கள் (1982)
  • இது எங்கள் கிழக்கு (1989)
  • விவசாயம் இவர் வேதம் (1992)
  • பண்ணைபுரம் தொடங்கி பக்கிங்காம் வரை (1993)
  • கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் (2000 ; 2007)
  • பூமியைத் திறக்கும் பொன்சாவி (2001)
  • இன்னொரு சிகரம் (2002)
  • விரல் நுனி வெளிச்சங்கள்
  • வெற்றியின் மூலதனம் (2004)


TNPSC TAMIL THAKUTI -MATIPPITTUT THERVU STUDY MATERIALS 2026 (தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு) PDF 



THARA BHARATHI -TNPSC PREVIOUS YEAR EXAM QUESTIONS :


1. தேசம் உடுத்திய நூலாடை எனக் தாராபாரதி குறிப்பிடும் நூல்

அ) திருவாசகம் 

ஆ) திருக்குறள்

இ) திரிகடுகம்

ஈ) திருப்பாவை

2. கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்

 தாராபாரதி 

3. தாராபாரதியின் இயற்பெயர்

இராதாகிருஷ்ணன்

4. தாராபாரதியின் சிறப்பு பெயர்

கவிஞாயிறு

5. தாராபாரதி இயற்றிய நூல்களில் பொருந்தாதது 

புதிய விடியல்கள்

இது எங்கள் கிழக்கு

விரல் நுனி வெளிச்சங்கள்

தூரத்து வெளிச்சம்

6. "பாரதம் அன்றைய நாற்றங்கால்" என்னும் கவிதையை எழுதியவர்

தாராபாரதி

7. ஆசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்

தாராபாரதி

8. "திண்ணையை இடித்துத் தெருவாக்கு உன் தெருவை மேலும் விரிவாக்கு!" என்னும் கவிதையை எழுதியவர்

தாராபாரதி

9. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் எது என்று தாராபாரதி குறிப்பிடுகிறார் 

அ) காவிரிக்கரை 

ஆ) வைகைக்கரை 

இ) கங்கைக்கரை 

ஈ) யமுனைக்கரை

11. "பூமிப் பந்து என்னவிலை? - உன் புகழைத் தந்து வாங்கும்விலை" என்னும் கவிதையை எழுதியவர்

தாராபாரதி

12. கடலில் எதுவாக இருத்தல் வேண்டும் என்று தாராபாரதி கூறுகிறார் ?

அ. துளி

ஆ. முத்து

இ. மீன்

13. இவர்களுள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்

அ. தாராபாரதி

ஆ. மருதகாசி

இ. பசுவய்யா

14. புதிய விடியல்கள் யாருடைய நூல் 

அ. தாராபாரதி

ஆ. மருதகாசி

இ. பசுவய்யா

15. "புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது" என்னும் பாடலை எழுதியவர்

தாராபாரதி

16. கம்பனின் அமுதக் கவிதைகளுக்குக் இதன் அலைகள் இசையமைக்கிறது என்று தாராபாரதி கூறுகிறார்

கங்கை

17. கன்னிக் குமரியின் கூந்தலுக்காகக் .... தோட்டம் பூத்தொடுக்கும் என்று தாராபாரதி கூறுகிறார்

காஷ்மீர்


உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கடலில் எதுவாக இருத்தல் வேண்டும் என்று தாராபாரதி கூறுகிறார் ?

அ. துளி
ஆ. முத்து
இ. மீன்

2. இவர்களுள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்

அ. தாராபாரதி
ஆ. மருதகாசி
இ. பசுவய்யா

3. புதிய விடியல்கள் யாருடைய நூல் 

அ. தாராபாரதி
ஆ. மருதகாசி
இ. பசுவய்யா

4.தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்கள் :

(i) திருவள்ளுவர்
(ii) காளிதாசர்
(iii) கம்பர்.

5.தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

அ) திருவாசகம்
ஆ) திருக்குறள்
இ) திரிகடுகம்
ஈ) திருப்பாவை
[விடை : ஆ) திருக்குறள்]


முக்கியப் பாடல்கள் & மேற்கோள்கள் (6-ஆம் வகுப்பு சமச்சீர் புத்தகம்)
பாடல்: "பாரதம் அன்றைய நாற்றங்கால்..."
முக்கிய வரிகள்:
"புதுமைகள் செய்த தேசம் இது - பூமியின் கிழக்கு வாசல் இது!""காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் காவிரி கரையில் எதிரொலிக்க, கம்பனின் அமுதக் கவிதைகளுக்குக் கங்கை அலைகள் இசையமைக்க...""புல்வெளி யெல்லாம் பூக்காடாகிப் புன்னகை செய்த பொற்காலம், கல்லைக்கூடக் காவியமாக்கிக் கட்டி நிறுத்திக் கலைக்கூடம்..."


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)