தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்:
- ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையைடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் பிரதமர் இல்லத்தில் 30.01.2025 காலை தொடங்கி நடைபெற்றது.
- இந்த கூட்டம் முடிவடைந்ததையொட்டி தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
- ராணுவப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற மேற்கு விமானப் படையின் முன்னாள் தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, தெற்கு ராணுவ முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங், முன்னாள் கடற்படை அதிகாரி மோன்டி கன்னா,
- இந்திய காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ராஜீவ் ரஞ்சன் வர்மா, மன்மோகன் சிங் ஆகியோர்
- ஐ.எஃப்.எஸ். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோர் இந்த குழுவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்புத் திட்டம்:
- மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 30.01.2025 வெளியிட்டார்.
- மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவித்திடவும், குறைக்கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கை 2024 தனை அறிமுகப்படுத்தியது.
- ஒன்றிய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டம் (Electronics Component Manufacturing Scheme) என்ற திட்டத்தின் கீழ் பயனடையும் நிறுவனங்களை மாநிலத்துக்கு ஈர்த்திடும் வகையில், ஒன்றிய அரசுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசும் ஊக்கத் தொகை வழங்கிட இந்த திட்டம் வழிவகை செய்யும். இதன்மூலம், தமிழ்நாட்டில் 30,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 60,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை:
- சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கில் Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான் நிறுவனம். இதன் மூலம் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவைக்கு சவால் விடுத்துள்ளது ஜெஃப் பெசோஸின் அமேசான் நிறுவனம்.
- உலக அளவில் இதன் மூலம் வேகமான மற்றும் மலிவு விலையில் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. அதற்கான தொடக்க புள்ளியாக 27 Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை ‘அட்லாஸ்’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான். வரும் நாட்களில் Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை அதிகளவில் விண்ணில் நிலை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடா பிரதமராக மார்க் கார்னே தேர்வு:
- கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- பொது தேர்தலில் லிபரல் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. மார்க் கார்னே புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை:
- காலனி' என்ற சொல் வசை சொல்லாக மாறி இருப்பதால், அந்த சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.
- இது குறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிப்படுத்தும் அடையாளமாக “காலனி” என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவலர் நாள்:
- ஆண்டுதோறும் செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- காவலர் நாள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ”சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து இரவுபகலாக வேலை செய்யும் காவல்துறையினருக்கான தனி நாளை அறிவிக்க விரும்புகிறேன்.
- 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் காவலர் நாள் கொண்டாடப்படும். இந்த நாளில் கடமை, கண்ணியத்தை பின்பற்றி செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காட்சிகள் நடத்தப்படும். ரத்த தான முகாம்கள் நடத்தப்படும்.” என்றார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி:
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்ற நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய்-யை 2025 மே 14 முதல் நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
- நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய்-யை உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான ஆணையில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி அவரது நியமனம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசின் நீதித்துறை வெளியிட்டுள்ளது. நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் 2025 மே 14 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
- நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 30.04.2025 மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும் என்று அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 246-ஆவது பிரிவின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது ஏழாவது அட்டவணையில் மத்தியப் பட்டியலில் 69-வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது
LIST OF IMPORTANT DAYS AND DATES IN APRIL 2025 IN TAMIL :
உலக நடன தினம்:
- ஆண்டுதோறும் ஏப். 29-ம் தேதி உலக நடன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
- இந்த நாள் புகழ் பெற்ற பாலே நடனக் கலைஞர் ஜீன் ஜார்ஜஸ் கோவ்ரே பிறந்த நாளாகும். அவரது நினைவைப் போற்றும் விதமாக, அவரது பிறந்த தினத்தை சர்வதேச நடன தினமாகக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!