உலகின் மிக உயரமான ரயில்வே இரும்புப் பாலம்:
- ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
- ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
- செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.
- நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இப்பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும்.
ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது:
- ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்துக்கான நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 11.06.2025 முதல் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்ட சஞ்சய், ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
- மேலும், இந்த குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- கடந்த 5 ஆண்டுகளாக ரெப்போ விகிதம் குறைக்கப்படாமல் 6.5 ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 100 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
- கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதிரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவிகிதத்தில் இருந்து 6.25 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்திருந்தது. தொடா்ந்து, ஏப்ரல் மாதமும் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது.
- இந்த நிலையில், தற்போது மேலும் 0.50 சதவிகிதத்தை குறைத்து 5.5% ஆக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம், வீடு, வாகன, தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஃபேல் போா் விமான பகுதி இந்தியாவில் தயாரிப்பு: டஸால்ட் - டாடா இடையே உடன்பாடு:
- ரஃபேல் போா் விமானங்கள் உடல் பகுதியை இந்தியாவில் தயாரிப்பதற்கான உடன்பாடு பிரான்ஸின் டஸால்ட் ஏவிஸேஷன் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (டிஏஎஸ்எல்) நிறுவனங்களிடையே உறுதி செய்யப்பட்டிருப்பதாக இரு நிறுவனங்களும் அறிவிப்பு வெளியிட்டன.
- இந்த உடன்பாட்டின் கீழ் டிஏஎஸ்எல் நிறுவனம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் நவீன வசதிகளுடன் கூடிய உற்பத்தி மையத்தை அமைக்க உள்ளது. ரஃபேல் போா் விமானத்தின் உடல் பகுதி பிரான்ஸ் நாட்டை விடுத்து வெளியில் தயாரிக்கப்படவிருப்பது இதுவே முதல் முறையாகும்.
- ரஃபேல் போா் விமானத்தின் பின்புற உடல் பகுதி, முழுமையான பின் பகுதி, மைய உடல் பகுதி, மற்றும் முன்புற உடல் பகுதி என டஸால்ட் நிறுவனத்துடன் 4 உற்பத்தி மற்றும் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தங்களை டிஏஎஸ்எல் கையொப்பமிட்டுள்ளது. இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய உற்பத்தி மையம் தெலங்கானா மாநிலம் ஹைதாராபாதில் அமைக்கப்பட உள்ளது
கிராம உதவியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, மதிப்பெண்கள் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை தமிழக வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது:
- இதுகுறித்து வருவாய்த்துறை செயலர் பெ.அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருவாய்த் துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது.
- அதன்படி, கல்வித் தகுதியில், எஸ்எஸ்எல்சியில் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் எஸ்எஸ்எல்சியில் தேர்வு பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
- இருசக்கர மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் அதற்கு தேர்வு நடத்த தேவையில்லை. மிதிவண்டி அல்லது மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தால் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். தமிழ் வாசிக்கும், எழுதும் திறன் பெற்றிருந்தால், திறனுக்கேற்ப 30 மதிப்பெண் வரை வழங்க வேண்டும். நேர்காணல் குழுவின் முன் வாசித்து, எழுதிக்காட்ட வேண்டும்.
- சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவராக இருந்தால் 35 மதிப்பெண் அல்லது, தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருந்தால் 30 மதிப்பெண் வழங்கப்படும். நேர்காணல், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பிற தனி வட்டாட்சியர் ஆகியோரைக் கொண்ட குழுவினரால் நடத்தப்படும்.
- இதற்கு 15 மதிப்பெண் வழங்கப்படும். விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 6, அதிகபட்சம் 12 மதிப்பெண் வரை வழங்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் 6-ஐ விட குறைவாகவோ, 12-ஐவிட அதிகமாகவோ மதிப்பெண் வழங்கக்கூடாது.
- கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் முறையாக உரிம விதிகள்படி வெளியிடப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையிட வேண்டும். தேர்வு முறை உரிய விதிகள்படி நடைபெற்றுள்ளதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்த பின், தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். இந்த விதிகளை மீறினால், அனைத்து அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினம் 2025 :
- உலகளவில் பிளாஸ்டிக் மாசு பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
- 2025 உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள் 'உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' (Ending Plastic Pollution Globally)என்பதை மையமாகக் கொண்டுள்ளது .
- இந்தக் கருப்பொருளை விரிவுபடுத்தும் வகையில், கடற்படை நிலையங்களை 'பிளாஸ்டிக் இல்லாத மண்டலமாக' அறிவிப்பது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைக் குறைப்பதற்கான இணையவழிக் கருத்தரங்குகள் மற்றும் சுவரொட்டிப் போட்டிகள், பொது உறுதிமொழிகளை நடத்துதல், கடலோரப் பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் அகற்றுதல் மற்றும் மீட்டெடுப்பு, சதுப்புநிலத் தோட்டங்கள் குறித்த புதிய முயற்சிகள், கடற்பாசி சாகுபடி மற்றும் பவளப்பாறை ஆய்வுகள் போன்ற முயற்சிகள் அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள் மற்றும் ஏராளமான அரசு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள நிறுவனங்களுடன் நெருக்கமான தொடர்புடன் எளிதாக்கப்பட்டுள்ளன.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!