CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2025 (11.06.2025-13.06.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2025 (11.06.2025-13.06.2025)


குஜராத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு :

  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 12.06.2025 பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என 242 பேர் பயணம் செய்தனர்.
  • முன்னாள் முதல்வர் உயிரிழப்பு: இந்நிலையில், புறப்பட்ட 2 நிமிடங்களில் அகமதாபாத் மெஹானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விமான பயணிகளில் 169 பேர் இந்தியர்கள். பிரிட்டனை சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் விமானத்தில் இருந்தனர். விமான ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் உள்ள 242 பேரில், 128 பேர் ஆண்கள், 100 பேர்பெண்கள், 14 பேர் குழந்தைகள் என தெரியவந்தது. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விமானத்தில் பயணம் செய்துள்ளார். விபத்தில் அவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்றபயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். 


தமிழகத்தில் கண்டறியப்பட்டது வீரியமற்ற ஒமைக்ரான் வகை கரோனா தொற்று- சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்:

  • மகப்பேறு காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கான சிகிச்சை குறித்து வழிகாட்டும் 2 நாள் பயிற்சி கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று தொடங்கியது. சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
  • பேறு காலத்தில் தாய்மார்கள் உயிரிழப்பு கடந்த 2021-22-ல் 1 லட்சம் பிரசவங்களுக்கு 90.5 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு 39.4 ஆக குறைந்துள்ளது. அதேபோல, பேறு கால சிசு உயிரிழப்பு 2021-22-ம் ஆண்டு 1,000 பிரசவங்களுக்கு 10.2 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு 7.7 ஆக குறைந்துள்ளது. இந்த உயிரிழப்புகளை பூஜ்ஜிய அளவுக்கு கொண்டு செல்ல பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
  • கடந்த ஒரு மாதமாக நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இருந்து 19 மாதிரிகளை புனே வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அது ஒமைக்ரான் வகை என்று கண்டறியப்பட்டது. அது வீரியமற்றது. பெரிய அளவில் உயிர் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது அல்ல என்று அறிவியல் ரீதியாக தெரியவந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு 3 நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025:

  • உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025 தற்போது வெளியாகி உள்ளது. 146 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025-ன்படி, ஆண்-பெண் பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 131-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது.


உலக மக்கள் தொகை நிலை அறிக்கை 2025 : 

  • ஐ.நா. மக்கள் தொகை நிதியம் (யுஎன்எப்பிஏ) 2025-ம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
  • இந்த ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியாகவும் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடியாக இருந்தது.


இந்தியர் சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்பும் ஆக்சியம்-4 ஏவுதல் மீண்டும் தள்ளிவைப்பு:

  • இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4 பயணத்தின் ஏவுதல் ஐந்தாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது என்று ஸ்பேஸ்-எக்ஸ் தெரிவித்துள்ளது.
  • அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.
  • இதன்​படி, அமெரிக்​கா​வின் புளோரி​டா​வில் உள்ள கென்​னடி விண்​வெளி மையத்​திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் டிராகன் விண்​கலம் ஏவப்பட உள்ளது. இந்த விண்​கலத்​தில் அமெரிக்​கா, இந்​தி​யா, போலந்து மற்​றும் ஹங்​கேரி நாடு​களைச் சேர்ந்த தலா ஒரு​வர் என 4 பேர் பயணிக்க உள்​ளனர். இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனத்​தின் (இஸ்​ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானி​யாக செயல்பட உள்ளார். இந்த விண்​கலம் 28 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடை​யும் என நாசா தெரி​வித்​துள்​ளது. இவர்கள் அங்கு 14 நாட்​கள் தங்கி இருப்​பார்​கள் என கூறப்​படு​கிறது.
  • கடந்த 1984-ம் ஆண்டு சர்​வ​தேச விண்​வெளி நிலையத்​துக்கு சென்ற ரஷ்​யா​வின் சோயுஸ் விண்​கலத்​தில் இந்​தி​ய​ரான ராகேஷ் சர்மா பயணித்​தார். சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு சென்ற முதல் இந்​தி​யர் என்ற பெருமை இவருக்கு கிடைத்​தது. 41 ஆண்​டு​களுக்​குப் பிறகு விண்​வெளி நிலை​யம் செல்​லும் இந்​தி​யர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்​ளார்.
  • உத்தர பிரதேச மாநிலம் லக்​னோவை சேர்ந்​த சுபான்ஷு சுக்​லா, கடந்த 2006-ல் இந்​திய விமானப்​படை​யில் சேர்ந்​தார். 2024-ம் ஆண்​டில் குழு கேப்​ட​னாக பொறுப்​பேற்​றார். இந்த சூழ்​நிலை​யில், கடந்த 2019-ம் ஆண்டு இஸ்​ரோ​வின் ககன்​யான் திட்​டத்​துக்​காக சுபான்ஷு தேர்வு செய்​யப்​பட்​டார். இதற்​காக ரஷ்​யா​வின் யூரி காகரின் விண்​வெளி மையத்​தில்​ சேர்ந்​து இவர் சிறப்​பு பயிற்​சி பெற்​றார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2025:

  • ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா 453.1 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • நார்வேயின் ஜீனெட் ஹெக் டியூஸ்டாட் 466.9 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தையும், சுவிட்சர்லாந்தின் எமிலி ஜேகி 464.8 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர்.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-11th-13th-june-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)