CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (01.09.2025-02.09.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (01.09.2025-02.09.2025)


அதிவீரியமிக்க மார்பகப் புற்றுநோய்க்கான எதிர்ப்பு மருந்து:

  • புதிதாக வடிவமைக்கப்பட்ட நைட்ரோ-மாற்று ஆர்கனோசெலினியம் கலவையான மருந்து விரைவாக பரவக்கூடிய மும்மடங்கு எதிர்மறையான மார்பக புற்றுநோய் செல்களின் வீரியத்தை அதன் பாதைகளை மாற்றியமைப்பதன் வாயிலாக குறைக்க உதவுகிறது. 
  • இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தில் (IASST - Institute of Advanced Study in Science and Technology) டாக்டர் ஆசிஸ் பாலா மற்றும் குவஹாத்தி IIT வேதியியல் துறையின் டாக்டர் கிருஷ்ணா பி. பாபக் ஆகியோர் இணைந்து நடத்திய ஆராய்ச்சி, ஆர்கனோசெலீனியம் கலவை 4-நைட்ரோ-பதிலீடு செய்யப்பட்ட பென்சிலிக் டைசெலனைடு 7 ஐ வெற்றிகரமாக வடிவமைத்து ஒருங்கிணைத்துள்ளது.
  • இந்த குழு, பென்சிலிக் ஹாலைடுகளை Na₂Se₂ மற்றும் NaHSe உடன் நியூக்ளியோபிலிக் மாற்றாகப் பயன்படுத்தி இதைத் தொகுத்தது. இது ஒரு மந்தமான வளிமண்டலத்தின் கீழ் சோடியம் போரோஹைட்ரைடுடன் தனிம செலினியத்தைக் குறைப்பதன் மூலம் பெறப்பட்டது.
  • புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நைட்ரோ-பதிலீடு செய்யப்பட்ட ஆர்கனோசெலினியம் கலவை, டைசெலனைடு 7 என அழைக்கப்படுகிறது, இது பல்வேறு சமிக்ஞை பாதைகளை மாற்றியமைப்பதன் மூலம் ஆக்கிரமிப்பு டிரிபிள்-நெகட்டிவ் மார்பக புற்றுநோய் செல்களின் ஊடுருவலைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டது. மார்பக அடினோகார்சினோமா உள்ள சுவிஸ் அல்பினோ எலிகளில், இது கட்டியின் அளவைக் கணிசமாகக் குறைத்து, ஆஞ்சியோஜெனீசிஸ் மற்றும் மெட்டாஸ்டாசிஸைக் குறைத்து, விலங்குகளின் ஆயுட்காலத்தை நீட்டித்தது.
  • புற்றுநோய் செல்களுக்குள் பல உயிர்வாழும் வழிமுறைகளை குறிவைப்பதன் மூலம் இந்த கலவை அதன் புற்றுநோய் எதிர்ப்பு விளைவை வெளிப்படுத்துகிறது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சிகிச்சையானது புற்றுநோய் செல்கள் வளர உதவும் மற்றும் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சிக்கு முக்கியமான இரண்டு முக்கியமான பாதைகளான Akt/mTOR மற்றும் ERK ஐத் தடுக்கிறது. இது எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களையும் (ROS) உருவாக்குகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது, இது டிஎன்ஏவை சேதப்படுத்தி புற்றுநோய் செல்களுக்கு தீங்கு விளைவிக்கும், இதனால் செல் இறப்பு ஏற்படுகிறது.
  • இந்த ஆய்வு, நைட்ரோ-பதிலீடு செய்யப்பட்ட ஆர்கனோசெலீனியம் சேர்மங்கள், பல இலக்கு புற்றுநோய் எதிர்ப்பு முகவர்களாக, பயனுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான அவற்றின் வளர்ச்சியை ஆதரிக்கும் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

செமிகான் இந்தியா 2025:

  • இந்தியாவின் குறைக்கடத்தி துறையை வளர்ச்சியடைய செய்யும் நோக்கில் செமிகான் இந்தியா – 2025-ஐ புதுதில்லி யஷோபூமியில் பிரதமர் திரு நரேந்திர மோடி (செப்டம்பர் 2 , 2025)  திறந்து வைத்தார்.
  • குறைக்கடத்தி துறையில் இந்தியா முன்னேறிச் செல்லும் விரைவை சுட்டிக்காட்ட விரும்புவதாகக் கூறிய திரு மோடி, 2021-ம் ஆண்டில் செமிகான் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். 2023-ம் ஆண்டில், இந்தியாவின் முதலாவது குறைக்கடத்தி உற்பத்தி ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், 2024-ம் ஆண்டு, மேலும் சில ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், 2025-ம் ஆண்டில், மேலும் ஐந்து திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர்  தெரிவித்தார். தற்போது மொத்தம், பத்து குறைக்கடத்தி திட்டங்கள் உள்ளதாகவும், இது ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புடைய முதலீட்டை கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். இது இந்தியாவின் மீது உலக நாடுகளின் வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
  • செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெறும் செமிகான் இந்தியா 2025 என்ற 3 நாள் மாநாடு இந்தியாவில் வலுவான நீடித்த செமிகண்டக்டர் சூழல் அமைப்பில் கவனம் செலுத்தும்.  மேலும், வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை எடுத்துரைப்பதோடு புத்தொழில் சூழல் அமைப்பின் வளர்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு, இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கான எதிர்காலத் திட்டம் ஆகியவற்றிலும்  கவனம் செலுத்தும்.
  • இந்த மாநாட்டில் 48 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான பிரதிநிதிகள், 50 உலகளாவிய தலைவர்கள் உட்பட 150-க்கும் அதிகமான உரையாளர்கள் 350-க்கும் அதிகமான காட்சிப்படுத்துநர் உட்பட 20,750 பேர் பங்கேற்பார்கள். இதில், 6 நாடுகளின் வட்டமேசை விவாதங்களும் நடைபெறும். பணியாளர் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான அரங்குகளும் இடம் பெறும்.

புதிய குடியேற்ற சட்​டம் 01.09.2025 முதல் அமலுக்கு வந்​துள்​ளது:

  • வெளி​நாட்​டினர் வரு​கையை முறைப்​படுத்த பாஸ்​போர்ட் சட்​டம்,வெளி​நாட்​டினர் பதிவு சட்​டம், வெளி​நாட்​டினர் சட்​டம், குடியேற்ற சட்​டம் போன்​றவை அமலில் இருந்​தன. அவை ஒன்​றிணைக்​கப்​பட்டு புதிய குடியேற்ற மசோதா 2025 (THE IMMIGRATION AND FOREIGNERS BILL -2025) வரையறுக்​கப்​பட்​டது.
  • இந்த மசோதா கடந்த ஏப்​ரலில் நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டு, குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. புதிய மசோ​தாவுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு கடந்த ஏப்​ரலில் ஒப்​புதல் வழங்​கி​னார். இதைத் தொடர்ந்து புதிய குடியேற்ற சட்​டம் -2025 (01.09.2025) முதல் நாடு முழு​வதும்  அமலுக்கு வந்​தது.


இந்தியா – தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சியின் 14 வது பதிப்பு 2025 :

  • இந்தியா – தாய்லாந்து இடையேயான 14-வது கூட்டு ராணுவப் பயிற்சியான ‘மைத்ரி’ ( MAITREE-XIV ) மேகலாயாவின் உம்ராயில் செப்டம்பர் 1 அன்று தொடங்கியது. 
  • செப்டம்பர் 14 வரை நடைபெறவுள்ள இருதரப்பு பயிற்சியில் இருநாட்டு ராணுவங்களின் தற்போதைய திட்டங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. 
  • இந்திய ராணுவத்தின் சார்பில் 120 வீரர்களும் தாய்லாந்து ராணுவத்தின் சார்பில் 53 வீரர்களும் இக்கூட்டுப் பயிற்சியில் இடம் பெற்றுள்ளனர். 

  • கடந்த 13-வது கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் டாக் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வச்சிராப்ராக்கானில் நடைபெற்றது.


உலக மக்களின் மனநலம் இன்று, மனநலம் வரைபடம் 2024 ஆகிய தலைப்புகளில் உலக சுகாதார அமைப்பு 2 அறிக்கைகளை வெளியிட்டுள்ளது:

  • உலக அளவில் நிகழும் மனித உயிரிழப்புகளில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு, தற்கொலை காரணமாக நிகழ்கிறது. 2021-ல் தற்கொலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரம். 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்று தற்கொலையாக மாறுகிறது.
  • 2011 முதல் மதிப்பிடப்பட்ட தரவுகளில் 20-29 வயதுக்கு உட்பட்டவர்களிடம் மனநல பாதிப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
  • மனநலக்கோளாறுகளில் முதலில் பதற்றம் ஏற்படுகிறது. பின்னர் அது மனச்சோர்வாக மாறுகிறது. 40 வயதுக்குப் பிறகு பதற்றத்தைவிட மனச்சோர்வுதான் அதிகமாக காணப்படுகிறது. 50 வயது முதல் 59 வயது வரை அது உச்சத்தை அடைகிறது.
  • அனைத்து நாடுகளிலும், அனைத்து சமூக - பொருளாதார சூழல்களிலும் இளைஞர்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக தற்கொலைதான் உள்ளது. தற்கொலை விகித்ததைக் குறைக்க உலக சுாதார அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
  • 2030-ம் ஆண்டுக்குள், தற்போதைய தற்கொலை விகிதத்தில் 3-ல் 1 பங்கை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இதை அடைவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் 12% மட்டுமே அடையமுடியும்.
  • போதுமான நிதி, வலுவான தலைமைத்துவம், ஏற்கெனவே உள்ள திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளே தேவையாக இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


current-affairs-in-tamil-01st-02nd-september-2025


Post a Comment

0Comments

Post a Comment (0)