CURRENT AFFAIRS IN TAMIL MAY 2025 (26.05.2025-28.05.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL MAY 2025 (26.05.2025-28.05.2025)



5ம் தலைமுறை போர் விமானம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

  • நம் நாட்டிடம் அதிக சக்திவாய்ந்த போர் விமானம் என்றால் அது ரஃபேல் போர் விமானம் தான். இதை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து நம் நாடு வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்த ரஃபேல் போர் விமானம் என்பது 4.5 ம் தலைமுறையை சேர்ந்தது.
  • இந்த ரஃபேல் போர் விமானம் என்பது போரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் கூட தற்போது நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல் காரணமாக விமானப்படையை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் நம் நாட்டுக்கும் உள்ளது.
  • இதனால் 5ம் தலைமுறை விமானம் என்பது முக்கியம். தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 5ம் தலைமுறை விமானத்தை தயாரித்துள்ளன.
  • துருக்கி 5ம் தலைமுறை விமானத்தை தயாரித்து சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் நம் நாடும் 5ம் தலைமுறை விமானத்தை உருவாக்க முடிவு செய்தது.
  • அதன்படி 5ம் தலைமுறை விமானத்தை ஏஎம்சிஏ திட்டம் (ACMA Programme) மூலம் தயாரிக்க நம் நாடு முடிவு செய்தது. இந்த ACMA என்பதன் விரிவாக்கம் என்பது Advanced Medium Combat Aircraft என்பதாகும்.
  • தமிழில் கூற வேண்டும் என்றால் மேம்படுத்தப்பட்ட மீடியம் ரக போர் விமானம் என்பதாகும். இந்நிலையில் தான் 5ம் தலைமுறை விமானத்தை அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • அதேபோல் விமானத்துக்கான மாடலுக்கு இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி இந்த விமானத்தை நம் பாதுகாப்பு துறையின் டிஆர்டிஓ நிறுவனம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து 5ம் தலைமுறை விமானங்களை தயாரிக்க உள்ளது.
  • இந்த திட்டத்தின்படி நம் நாட்டுக்கு 5ம் தலைமுறை விமானம் என்பது 2035ம் ஆண்டில் கிடைக்கும். இந்த 5ம் தலைமுறை போர் விமானம் என்பது ஸ்டெல்த் மல்டிரோல் போர் விமானமாகும்.
  • சிங்கிள் சீட், 2 இன்ஜின்களுடன் தயாரிக்கப்பட உள்ளது. ஸ்டெல்த் ரகம் என்பதால் இந்த விமானம் எதிரிகளின் ரேடாரில் சிக்காது. இதனால் இது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.

  • 5ம் தலைமுறை போர் விமானம், 2035ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சமீர் வி காமத் கூறுகையில், 'இந்தத் திட்டத்திற்கு 2024ம் ஆண்டு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 5ம் தலைமுறை விமானங்களை பயன்பாட்டுக் கொண்டு வர 10 ஆண்டுகளாகும். 4ம் தலைமுறை இன்ஜினான காவேரியில் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். தற்போது எங்களின் இலக்கு 6ம் தலைமுறை இன்ஜின் தான்,' என்றார்.


உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆலோசனைக் குழுவின் கூட்டம் :

  • மும்பையில்  நடைபெற்ற உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமை தாங்கினார். 
  • 2027 ஆம் ஆண்டுக்குள் 76 நீர்வழிப் போக்குவரத்துகளை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 நிதியாண்டின் இறுதிக்குள் சரக்கு அளவு ஆண்டுக்கு 156 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம், முக்கிய திட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் திட்டங்கள் பற்றிய விரிவான மதிப்பாய்வை வழங்கியது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உலகின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட ‘பாரத் முன்னறிவிப்பு அமைப்பு’:

  • மத்திய புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உலகின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட வானிலை முன்னறிவிப்பு அமைப்புகளில் ஒன்றான பாரத் முன்னறிவிப்பு அமைப்பை (Bharat Forecast Systemஅர்ப்பணித்தார்.
  • புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன அமைப்பு, இந்தியாவின் வானிலை முன்னறிவிப்பு துல்லியத் தன்மையை, 12 கி.மீட்டரிலிருந்து 6 கி.மீட்டராக உயர்த்தி, ஒவ்வொரு கிராமமும் மிகவும் துல்லியமான மற்றும் இருப்பிடம் சார்ந்த முன்னறிவிப்புகளை பெற உதவுகிறது என்றார். 
  • இந்த முன்னேற்றம் இந்தியாவின் வானிலை சேவைகளில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது, தன்னிறைவடைந்த பாரதம் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் முயற்சிகளின் கீழ் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு 2025 உலக சுற்றுச்சூழல்சிறப்பு விருது:

  • புது டெல்லியில் உள்ள Roseate House ஏரோசிட்டியில், உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Global Energy and Environment Foundation GEEF) ஏற்பாடு செய்த, உலக எரிசக்தி தலைவர்கள் மாநாட்டில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2025-ஆம் ஆண்டுக்கான "உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம்" என்னும் உயரிய விருதைப் பெற்றுள்ளது.
  • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் டாக்டர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா, இந்த விருதினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், உடன் இருந்தனர்.
  • இந்த உலக சுற்றுச்சூழல் சிறப்பு விருது, மாற்றத்தை உருவாக்கி, அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவும் மிகச்சிறந்த நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் அவர்களின் குழுக்களை கௌரவிக்கிறது.
  • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், வளப் பாதுகாப்பு, சூரியமின்சக்தி பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான பசுமையான தோட்டங்களை வளர்த்து சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்காக தனித்து நிற்கிறது.
  • இந்த விருதை பெற்ற ஒரே மெட்ரோ நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் என்று தெரிவித்துள்ளது.


கேரள கடற்கரையில் லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியது:

  • லைபீரிய கொள்கலன் கப்பல் எம்வி எம்எஸ்சி எல்எஸ்ஏ 3 கேரள கடற்பகுதியில் மூழ்கியதைத் தொடர்ந்து, இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) முழு அளவிலான மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தக் கப்பல்  மே 25, 2025 அன்று கேரளாவின் ஆலப்புழாவிலிருந்து தென்மேற்கே சுமார் 15 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது. 
  • கப்பல் மூழ்கிய சில மணி நேரங்களுக்குள், ஐசிஜி கண்காணிப்பு விமானம் அந்த இடத்தில் கப்பலிலிருந்து கசிந்த எண்ணெய் படலத்தைக் கண்டறிந்தது. ஏற்கனவே மாசுபாட்டுக்கு எதிராகப் போராடும் கட்டமைப்பில் நிறுத்தப்பட்டுள்ள ஐசிஜி கப்பல் சாக்ஷம் உடனடியாக அனுப்பப்பட்டது. 
  • ஐசிஜி டோர்னியர் விமானம் வான்வழி மதிப்பீடுகளை நடத்தி, பாதிக்கப்பட்ட மண்டலம் முழுவதும் எண்ணெய் கசிவு பரவலை கண்டறிந்தது.

9000 குதிரைத் திறன் மின்சார ரயில் என்ஜினை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

  • பிரதமர் மோடி குஜராத்துக்கு இரண்டு நாள்கள் அரசுப் பயணமாக வந்துள்ளார். (மே 26) காலை வதோராவில் சாலைப் பேரணியை நடத்தினார். 
  • இதனைத் தொடர்ந்து, குஜராத்தின் தாஹேத்தில் உள்ள இந்திய ரயில்வேயின் மின்சார ரயில் என்ஜின் ஆலையை பிரதமர் மோடி தொடக்கி வைத்து, இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட மின்சார ரயில் என்ஜினை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
  • இந்த ஆலையில் 9000 குதிரைத்திறன் கொண்ட மின்சார ரயில் என்ஜின்கள் உள்நாட்டு தேவைக்காகவும் ஏற்றுமதிக்காகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. சரக்கு ரயில் போக்குவரத்துக்கு இந்த என்ஜின்கள் முக்கிய பங்காற்றும்.
  • இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் பங்கேற்றனர்.
  • பின்னர், தாஹோத்தில் சுமார் ரூ. 24,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடக்கி வைத்தார். 
  • தொடர்ந்து, வேராவல் அகமதாபாத் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலையும், வல்சாத் தாஹோத் நிலையங்களுக்கு இடையே விரைவு ரயிலையும் பிரதமர் தொடக்கி வைத்தார்.


78-வது உலக சுகாதார மாநாடு:

  • ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம் என்ற கருப்பொருளின் கீழ் ஜெனீவாவில் நடைபெற்ற 78-வது உலக சுகாதார மாநாட்டில், சுகாதாரப் பராமரிப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக பாரம்பரிய மருத்துவ அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தனது வலுவான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 
  • இந்தியாவின் சார்பில் பங்கேற்று பேசிய ஜெனீவாவில் உள்ள ஐநா சபையின் நிரந்தர பிரதிநிதி திரு அரிந்தம் பாக்சி, உலக சுகாதார அமைப்பு, புதிய உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உத்தி 2025–2034-ஐ ஏற்றுக்கொண்டதை வரவேற்றார். 
  • மேலும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய நடைமுறைகளை தேசிய மற்றும் உலகளாவிய சுகாதார கட்டமைப்புகளில் இணைப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை எடுத்துரைத்தார்.


கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுகள் 2025:

  • டையூவில் நடைபெற்ற கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுகள் 2025-ன் வாலிபால் போட்டிகளில் தமிழ்நாட்டின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சாம்பியன் பட்டங்களை வென்றன. 
  • 2023-ம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற மத்திய ஆசிய வாலிபால் சங்கத்தின் கான்டினென்டல் கோப்பை இறுதிப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதைப் போல் சர்வதேச போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்த அணியில் குறிப்பாக ராபின் ரவி (வயது 23), பரத் சோமு (வயது 22) ஆகியோர் பாலவாக்கம் கடலோர சமூகத்திலிருந்து உருவானவர்கள். இந்த இரட்டையர்கள் வெள்ளியன்று (23.05.2025) நடைபெற்ற கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டில் ஆடவர் வாலிபால் போட்டியிலும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக கடற்கரை விளையாட்டுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN MAY 2025 IN TAMIL:


உலக பட்டினி தினம் (World Hunger Day):

  • ஒவ்வோர் ஆண்டும் மே 28 அன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலகளாவிய பட்டினி குறியீடு 2024 (Global Hunger Index 2024) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் நிலை கவலையளிப்பதாகவே உள்ளது.உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 105-வது இடத்தைப் பிடித்துள்ளது. 
  • இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் 13.7% ஆக உள்ளது. இது உலக அளவில் மிகவும் அதிகமான ஒன்றாகும். 
  • மேலும், குழந்தைகள் உடல் எடை குறைபாடு விகிதத்தில் உலகிலேயே அதிகபட்சமாக இந்தியா 18.7% பங்களிப்பைக் கொண்டுள்ளது. இது எதிர்கால இந்திய தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. 
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில் 2.9% ஆகப் பதிவாகியுள்ளது. இந்த இறப்புகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடே ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

உலக இரத்த புற்றுநோய் தினம்(World Blood Cancer Day) : 

  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புற்றுநோயானது உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இது ஆறு இறப்புகளில் ஒன்று (2018 தரவுகளின்படி) ஆகும். 
  • இரத்தப் புற்றுநோய்கள் அனைத்து புற்றுநோய்களிலும் தோராயமாக 7 சதவிகிதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது .
  • உலக இரத்த புற்றுநோய் தினம் (WBCD), ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று நடத்தப்படுகிறது, இது இரத்த புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய விழிப்புணர்வு நாளாகும். 

சர்வதேச பெண்களின் ஆரோக்கிய தினம்(International Day of Women’s Health Day) : 

  • 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 28 ஆம் தேதி சர்வதேச மகளிர் ஆரோக்கிய தினம் கொண்டாடப்படுகிறது. 
  • பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு கவனத்தை ஈர்ப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



current-affairs-in-tamil-26th-28th-may-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)