22-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு 2025 :
- கோலாலம்பூரில் 22வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு அக்டோபர் 26, 2025 அன்று நடைபெற்றது. பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இந்த உச்சிமாநாட்டில் மெய்நிகர் முறையில் பங்கேற்றார்.
- பிரதமரும் ஆசியான் தலைவர்களும் இணைந்து ஆசியான்-இந்தியா உறவுகளில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, விரிவான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகளைப் பற்றி விவாதித்தனர்.
- இது இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமரின் 12வது பங்கேற்பு.
22-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் முக்கிய அம்சங்கள்:
பிரதமரின் தொடக்க உரையின் முக்கிய கருப்பொருள்கள்
உறவுகளின் வலுமை:
- இந்தியாவும் ஆசியானும் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைக் குறிக்கின்றன
- புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல், ஆழமான வரலாற்று உறவுகள் மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளனர்
கூட்டாண்மையின் தன்மை:
- உலகளாவிய தெற்கில் கூட்டாளிகள்
- வணிக பங்காளிகள் மட்டுமல்ல, கலாச்சாரப் பங்காளிகளும் கூட
- ஆசியான் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் மூலக்கல்லாகும்
2025-ம் ஆண்டின் முக்கியத்துவம்
- கருப்பொருள்: "உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை"
- டிஜிட்டல் உள்ளடக்கம்
- உணவுப் பாதுகாப்பு மற்றும் மீள் விநியோகச் சங்கிலிகள்
முக்கியமான அறிவிப்புகள்
- 2026-ஐ "ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக" அறிவித்துள்ளார்
- கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் ஒத்துழைப்பு
ஒத்துழைப்புத் துறைகள்
- நிலையான மேம்படுத்தல் நடைபெறும் துறைகள்:
- கல்வி
- சுற்றுலா
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- சுகாதாரம்
- பசுமை எரிசக்தி
- சைபர் பாதுகாப்பு
எதிர்காலத் திசை
- 21-ம் நூற்றாண்டு: "நமது நூற்றாண்டு, இந்தியா மற்றும் ஆசியானின் நூற்றாண்டு"
- ஆசியான் சமூக தொலைநோக்கு பார்வை 2045
- வளர்ச்சியடைந்த பாரதம் 2047
முக்கிய அங்கீகாரங்கள்
- கிழக்கு தைமூரை ஆசியானின் புதிய உறுப்பினராக வரவேற்றல்
- தாய்லாந்து ராஜமாதா ராணி சிரிகிட் மறைவுக்கு இரங்கல்
- இந்த உச்சிமாநாடு இந்தோ-பசிபிக் பகுதியில் ஆசியான் மையத்தன்மையை வலுப்படுத்துவதோடு, நிச்சயமற்ற காலகட்டத்தில் உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டிற்கான வலுவான அடித்தளமாக விளங்குகிறது.
ஆசியான்" (ASEAN) அமைப்பு :
- இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, புரூனே, வியத்நாம், லாவோஸ், மியான்மா், கம்போடியா ஆகிய 10 நாடுகளை உறுப்பினராக கொண்ட இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 1992-ஆம் ஆண்டு முதல் அதனுடனான பேச்சுவாா்த்தை உறுப்பினா் உறவை இந்தியா தொடா்ந்து வருகிறது.
- இந்த உறவுக்கான முக்கிய நோக்கம் அரசியல், பொருளாதாரம், மற்றும் பிராந்திய பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில் ஒத்துழைப்பு, சந்திப்பு, உச்சிமாநாடு ஆகியவை தொடர்ந்து நடைபெறுகின்றன

